Tuesday, April 24, 2012

தாயுமான சுவாமிகள் ஜீவ சமாதி இராமநாதபுரம்



இவரின் ஜீவ சமாதி இராமநாதபுரத்தில் உள்ளது.இவர் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த‌
மகான் என்றறியப்படுகிறது.இவர் திருச்சி மலைக்கோட்டையில் உள்ள தாயுமான சுவாமிகளை வேண்டிக்கொண்டு பிறந்ததால் தாயுமானவர் எனப்பெயர் பெற்றார்.சிவபெருமானின் பெருமைகளை பல பக்தி இலக்கியங்களை படைத்துள்ளார்.இவர் பல ஸ்தலங்களை தரிசித்துவிட்டு ராமேஸ்வரம் சென்றுவிட்டு இராமநாதபுரம் மகாராஜாவின் உபசரிப்பில் இராமநாதபுரத்திலேயே தங்கினார்.இங்குள்ள காட்டூரணியில் இவர் நிஷ்டையில் அமர்ந்திருக்கும்போது அறியாத பொதுமக்கள் இவர் இறந்துவிட்டதாக நினைத்து அப்படியே எரித்துவிட்டதாகவும் இராமநாதபுரத்தில் ஒரு கதை சொல்லப்படுகிறது.இயற்கையான முறையிலேயே சமாதி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.இவர் இங்கு தங்கியிருந்தபோது
பலருக்கு பலவித நோய்களை குணப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.இவரைப்பற்றி முழுவதுமாக தெரிந்துகொள்ள இங்கு சொடுக்குங்கள்

Tuesday, April 17, 2012

கோவிலுக்கு வருபவர்களுக்கு மயில்தோகை மூலம் சாமரம் வீசும் முதியவர்

படத்தில் இருப்பவர் பெயர் நடராஜன் என்பதாகும்.வயது 82இவர் கோவில்களில் மயிலிறகை வைத்து வந்துள்ள பக்தர்களுக்கு சாமரம் வீசுகிறார்.இவரிடம் பிள்ளையார்பட்டி கோவிலில் முதல் முதல் சாமரக்காத்து வாங்கினேன் பக்தர்களாக பார்த்து பிரியப்பட்டு கொடுக்கும் பணத்தை வாங்கிகொள்கிறார்.இவர் 12 வயதில் இருந்து இப்படி சாமரம் வீசி வருகிறார்.ஒரு முறை கோவிலில் விசிறி வைத்து வீசும் ஒரு முதியவர் வராததால் தான் இப்படி ஒரு மயில்தோகை விசிறி தயார்செய்து வீசி வருவதாக கூறுகிறார்.அம்பானி முதல் அத்வானி வரை பல பிரபலங்களுக்கு சாமரம் வீசி அவர்களின் பாராட்டையும் பெற்றுள்ளார்காந்தி,நேரு,போன்றவர்களுக்கும் வீசியுள்ளார்.மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இவரை அடிக்கடி இவரை பார்க்கலாம்.10 வருடங்கள் மீனாட்சி கோவிலிலேயே வீசியவர்.திங்கள் செவ்வாய்களில் திருப்பரங்குன்றத்திலும், புதன்கிழமை பழனி,
வியாழன் திருச்செந்தூர்,வெள்ளி மற்றும் ஞாயிறு மீனாட்சி அம்மன் கோவில் சனிக்கிழமை திருச்செந்தூர்,அமாவாசையன்று ராமேஸ்வரத்திலும் பவுர்ணமியன்று திருவண்ணாமலையிலும் இவர் மயில் சாமரம் வீச வந்து விடுகிறார் என் உயிர் இருக்கும்வரை இந்த வேலையை செய்வேன் கடவுள் கிருபையால் நன்றாக இருக்கிறேன் என்கிறார்.இவரின் தெய்வசேவை போற்றுதலுக்குரியது.இவர் 5 ராமேஸ்வரம் கோவில் கும்பாபிசேகத்தையும்
5 மீனாட்சி கோவில் கும்பாபிசேகத்தையும் பார்த்தாக சொல்கிறார்.இவர் போல மனிதர்களால்தான் கொஞ்சமாவது நல்ல மழை பெய்கிறது என்று நினைக்கிறேன்.

Tuesday, April 10, 2012

சதுரகிரி மலையில் ஒற்றைகொம்பு யானையிடம் பாசம் காட்டிய அன்பும் இரக்கமும் கொண்ட வல்லநாடு சித்தர் சாதுசிதம்பரசுவாமிகள்

இவர் வள்ளலார் வழிவந்தவர் தனது வாழ்நாளில் எண்ணற்ற முறை சதுரகிரி வந்து சென்றிருக்கிறார் என்கின்றனர் இவரது பக்தர்கள்.சதுரகிரியில் சிதம்பர சுவாமிகள் பார்க்காத மரமே இல்லை.அவர் கால் படாத பகுதி இல்லை அங்கு வசிக்கும் மனிதர்கள் மற்றும் விலங்குகள் மீது அலாதிப்பிரியம் உண்டு இவருக்கு.இவர் சமாதியாகி 27வருடங்களுக்கும் மேலாகிவிட்டது.இவரது சமாதி திருநெல்வேலி தூத்துக்குடி வழித்தடத்தில் வல்லநாட்டில் உள்ளது.வருடந்தோறும் வைகாசிமாதம் இவருக்கு குருபூஜை நடக்கும் இதில் லட்சக்கணக்கானோர் கலந்ந்துகொள்கின்றனர் கணத்த சரீரம் தீட்சண்யமான கண்களுடன் வேட்டியை துண்டுபோல இடுப்புக்கு மேலே கட்டியிருப்பார்.ஒரு மனிதரை பார்த்தவுடன் அவருக்கு என்ன சிக்கல் என அந்த வினாடியே உணர்ந்து சொல்வார் அதற்கான தீர்வையும் சொல்வார் .இவர் எப்போது மலைக்கு வந்தாலும் மலைவாழ் மக்களுக்கும் சேர்த்தே உணவுப்பொருட்கள் முதலியவற்றை எடுத்துவருவார் இவருடன் இவரது சீடர்களும் வருவர்
இவர் இந்த மலைக்கு வந்தால் ஒரு மண்டலம் இரண்டு மண்டலம் என நீண்டநாட்கள் தங்கித்தான் செல்வார்.சதுரகிரி மலையில் அன்னதானத்தை தொடங்கிவைத்த பெருமையும் முதலில் இவரையே சேரும்.இவர் வள்ளலார் வழிவந்தவர் ஆதலால் ஜோதிதரிசனத்தை பெரிதும் விரும்புவார்.வித்தியாசமாக நவக்கிரக பூஜை செய்வார்.அனைவரையும் சாமி சாமி என்று மரியாதையாக அழைப்பார் மரியாதைக்குறைவாக யாரையும் அழைக்கமாட்டார்.

விலங்குகளிடத்தில் மிகுந்த அன்புகொண்டவர்.இவர் இங்கு இருந்த காலத்தில் இங்கு ஒரு ஒற்றைக்கொம்புடன் கூடிய யானை ஒன்று இருந்தது சிதம்பரசுவாமியும் யானையும் சந்தித்துக்கொள்ளும் காட்சி அவ்வளவு நெகிழ்ச்சியாக இருக்கும்.விநாயகரின் அம்சமாக இந்த யானையை சுவாமி கருதினார் சுவாமி சொல்லும் செயலை அப்படியே அந்த யானை செய்யும் நடனம் கூட ஆடும்.சில காட்டுவிலங்குகளை வேட்டையாடும் சில கயவர்களுக்கு இந்த விசயங்கள் பிடிக்கவில்லை.அதற்க்கு காரணம் சில சாதுவான மிருகங்களை வேட்டையாடுவது சாமியை போலவே யானைக்கும் பிடிக்காது வேட்டையாடும் சிலரை யானை குறிவைத்து துரத்துமாம் .இதனால் இந்த யானையை கொன்று தந்தத்தை எடுத்து
விட வேண்டும் என்று உறுதியாய் இருந்தனர் அவர்கள் ஒர் நாள் சுவாமிகளின் பிரியமான ஒற்றைக்கொம்பனை குறிவைத்து கொன்றுவிட்டனர்.சுவாமி அவர்கள் வேதனையில் மனம் வாடினார்.மூன்று நாட்கள் உணவின்றி மிகவும் வருந்தினார்.யானையை கொன்ற கயவர்கள்
சுவாமிகள் தான் தந்தத்திற்க்கு ஆசைப்பட்டு கொன்றார் எனப்பழிபோட்டனர்.சுந்தரமகாலிங்கத்தின் அருளால் காவல்துறை விசாரணையில் உண்மையான குற்றவாளிகளை பிடித்தனர்.சுவாமிகளின் முயற்சியினால் அந்த ஒற்றை கொம்பு தந்தம் அங்கேயே 1971ம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுஇன்றளவும்  வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

கடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்துமாரியம்மன் ஆலயம்

தஞ்சை மாவட்டம் , மயிலாடு ‌ துறை வட்டம் , குத்தாலம் அருகில்   உள்ள ‌ சேண்டிருப்பு கிரமத்தில் எமுந்தருளி பேரருள் வ ‌ ழங்கும்   அருள...