Thursday, December 29, 2011

உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவில்

ராமாயணத்தின் பெரும்பகுதி நிகழ்வுகள் ராமநாதபுரம் மாவட்டத்தில்தான் நடந்துள்ளதாக வரலாறு கூறுகிறது. இங்கு ராமர் ஏற்படுத்திய நவக்கிரஹம் நவபாஷாணம் என அழைக்கப்பட்டு
தேவிபட்டினத்தில் உள்ளது.கடலின் நடுவில் உள்ள நவபாஷாணத்தில் வழிபட்டால் நவக்கிரகதோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.ராமர் இலங்கைக்கு செல்லும்போது திருப்புல்லணை என்ற இடத்தில் தங்கி சென்றார் அதாவது இவர் தங்கியபோது தர்ப்பைபுல்லில்
படுத்துறங்கினார் அதனால் திருப்புல்லணை எனப்பெயர் ஏற்ப்பட்டு காலப்போக்கில் திருப்புல்லாணி எனப்பெயர் மாறியது.இந்தக்கோவில் ராமவதாரத்துக்கு முந்தைய கோவில்
தசரதசக்கரவர்த்தி இங்குள்ள ஆதிஜெகநாதரை வணங்கிய பாயாச நைவேத்யம் செய்தார் அதற்கு
பிறகே ராமர் பிறந்தார்.அதனால் பிள்ளையில்லாதவர்கள் இங்கு உள்ள பத்மாசனித்தாயாரையும்
ஜெகநாதபெருமாளையும் வணங்கினால் குழந்தைபிறக்கும் என்பது ஐதீகம்.சேதுக்கரையில் இருந்து ராமர் இலங்கைக்கு சென்றார் இங்கிருந்து செல்வதற்க்கு ஆஞ்சநேயர் பாலம் அமைக்க‌
உதவினார்.அதனால் சேதுக்கரையில் ஆஞ்சநேயர் கோவில் ஒன்று உள்ளது.இந்த சேதுக்கரையில் பிதுர் தர்ப்பணம் செய்யப்படுகிறது.மேலும் இலங்கை சென்று விட்டு சீதாப்பிராட்டியை மீட்டபிறகு ராமேஸ்வரம் வந்த ராமர் சிவலிங்கத்தை பூஜித்து வணங்கினார்
அதுவே ராமேஸ்வரம் என இந்துக்களின் புனிதத்தலமாக போற்றப்படுகிறது.எந்த ஒரு செயலுக்கும் விநாயகர் வழிபாடு மிக முக்கியம்.முழுமுதற்கடவுளான விநாயகரை வழிபட்ட பிறகே கோவில்களில் இருக்கும் அனைத்து கடவுளையும் வழிபடுகிறோம்.பிள்ளையார் சுழி போட்டே அனைத்து வேலைகளையும் தொடங்குகிறோம்.அப்படி ராமபிரான் இலங்கைக்கு
செல்வதற்க்கு முன் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்த இடம்தான் உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவில் இங்கு சீதாவை மீட்க இலங்கை செல்லும்போது முதலில் இங்குள்ள விநாயகரை வணங்கித்தான் சென்றார்.ராமபிரானின் வெற்றிக்கு இங்கு உள்ள விநாயகரும்
ஒரு முக்கிய காரணம் விழாக்காலங்களில் சித்திபுத்தி தேவிகளுடன் இந்த விநாயகர் காட்சி தருவது சிறப்பு.இதுகோவிலாக இருந்தாலும் இங்கு உள்ள விநாயகருக்கு மேற்கூரைஇல்லாமல்
வெயில்படும்படி அமைத்திருப்பது சிறப்பு.கடுமையான நோய்களை இந்த விநாயகர் போக்குகிறார்.எந்த ஒரு பெரியகாரியத்திற்க்கும் இவரை வணங்கி அடுத்த காரியத்தை தொடங்கினால் வெற்றி நம் வசம்தான் ஏனென்றால் ராமருக்கே வெற்றியை கொடுத்தவர் இவர்.கேதுவால் அவஸ்தைக்குள்ளாவோர் இவரை வணங்கினால் விநாயகர் கேது தோஷத்தில் இருந்து விடுதலை கொடுப்பார்.
கர்ண பரம்பரையாக புராணங்கள் வேறுபட்டபோதிலும் இத்திருக்கோயிலை கட்டியவர் ராமநாதபுரம் மன்னரான பாஸ்கரசேதுபதி ஆவார். 1905ம் ஆண்டு இக்கோயில் கட்டியதாக கூறப்படுகிறது. மரத்தடியில் இருந்த இறைவன் ஓர் அர்ச்சகர் வடிவில் கனவில் வந்து எனக்கு எல்லா கோயில்களிலும் உள்ளது போல் கர்ப்பகிரகத்தில் அதாவது அர்த்த மண்டபத்தை மூடவிடாமல் எப்பொழுதும் என் மேல் வெயில்படும்படி கோயில் அமைத்தல் வேண்டும் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணத்தால் இத்திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ள விநாயகர் பெருமான் மீது தட்சிணாயன காலங்களில் தெற்கு பகுதியில் சூரியவெளிச்சம் படுகிறது. உத்தராயண காலங்களில் வடக்கு பக்கமாக சூரிய வெளிச்சம் படுகிறது.
பாண்டி நாட்டில் கீழக்கடற்கரை ஓரமாக தேவிபுரம், காளிபுரம், திருப்புணவாயில் ஆகிய தலங்களுக்கு அருகே அமைந்துள்ள வன்னிமந்தாரவனம் என்ற பகுதியில் உள்ள விநாயகரை துதித்து தவத்தில் ஈடுபட்டார். ஆதவனின் தவத்தால் மகிழ்வுற்ற விநாயகர் உடன் காட்சியளித்து அவரது பாவங்கள் விலகுமாறு அருளினார். தனக்கு அருள்புரிந்ததுபோல் பக்தர்களுக்கும் அருள் வழங்குமாறு வெய்யோன் வேண்டினார். மேலும் திருமேனி மீது தனது ஒளிக்கதிர்கள் முழுமையாக விழுந்து வணங்க வழிகாட்டுமாறு சூரியன் வரம் பெற்றார். சூரியன் கதிர்கள் தன் மீது முழுமையாக வீசுமாறு கோயில் கொண்டதால் இப்பெருமானுக்கு வெயிலுகந்த விநாயகர் என்ற பெயர் நிலைத்தது.

செல்லும் விபரம்:ராமநாதபுரத்தில் இருந்து தொண்டி,பட்டுக்கோட்டை,நாகப்பட்டினம் செல்லும் பேருந்துகளில் சென்று தேவிபட்டினம் தாண்டி உப்பூர் என்ற ஊரில் இறங்கவேண்டும்
அங்குதான் இந்த விநாயகர் கோவில் உள்ளது.

Wednesday, December 28, 2011

அருள்மிகு ரத்தினகிரி முருகப்பெருமான்

வேலூர் மாவட்டத்தில் வேலூர் நகரில் அமைந்துள்ளது .இத்திருக்கோவில் 1960களில் இப்பகுதிக்கு வந்த ஒரு மின்வாரிய ஊழியர் ஒருவர் இங்கிருந்த சிறு முருகன் சிலையை வணங்கி
விட்டு தீபாராதனை காண்பிக்க சொன்னார்.அர்ச்சகர் சொன்னார் இந்த கோவில் சிறு கோவிலாக‌
இருப்பதால் யாரும் சூடம்,பத்தி போன்றவைகளை வாங்கி வருவதில்லை எனச்சொன்னார் முருகா உனக்கே இந்த நிலைமையா என யோசித்தவர் மூர்ச்சையாகி கீழே விழுந்தார் விழுந்தவர் முருகன் என்னை ஆட்கொண்டுவிட்டான் என இங்கேயே உட்கார்ந்து விட்டார்
கோவில் திருப்பணிகள் செய்து பெரியகோவிலாக மாற்றிவிட்டார்.அவர் தற்போது பாலமுருகனடிமை என அழைக்கப்படுகிறார்.அவராக விரும்பும் பக்தர்களை அழைத்து அவரின்

பிரச்சினைகளை எழுத்து மூலம் எழுதிக்காட்டி முருகனின் அருளால் தீர்த்து வைக்கிறார் முருகன் ஆட்கொண்டதில் இருந்து மெளனச்சாமியாராக வலம் வருகிறார்.இந்த கோவிலில் முன்னாள் பிரதமர் வி.வி கிரி உட்பட பலர் வந்துள்ளனர்.நீங்களும் ஒருமுறை சென்று ரத்தினகிரி
முருகனின் அருள்பெற்று வாருங்கள்

Saturday, December 17, 2011

கட்டிக்குளம் சூட்டுக்கோள் மாயாண்டி சுவாமிகள்

இந்த பாரதநாடு பல ஆன்மிகவாதிகளையும் ரமணமஹரிஷி,யோகிராம்சுரத்குமார்,காஞ்சிப்பெரியவர்,கிருபானாந்தவாரியார்,போன்ற மகான்களை கொடுத்தது.தற்காலத்திலும்
 போலி ஆன்மிகவாதிகள் மத்தியில் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் போன்ற நல்ல ஆன்மிகவாதிகளும் இருக்கத்தான் செய்கின்றனர்.கடந்து போன 20ம்நூற்றாண்டில் மதுரை அருகே வாழ்ந்த ஒரு உயர்ந்த மகானை பற்றிப்பார்க்கவே இந்த பதிவு


மதுரை ராமேஸ்வரம் மெயின் ரோட்டில் உள்ள திருப்பாச்சேத்தி அருகே உள்ள கட்டிக்குளம்
என்ற ஊரில் ஒரு மண்பாண்டம் செய்யும் தம்பதிகளுக்கு மகனாக பிறந்தவர் மாயாண்டி சுவாமிகள்
பக்தர்கள் வாழ்வில் பல சித்து விளையாட்டுக்களை நிகழ்த்தியவர்.இவரிடம் சூடான கம்பி ஒன்று
இருக்கும் இதை சூட்டுக்கோல் எனக்கூறுவர்.தம்மிடம் குறைகளை கூறவருபவரிடம் கைகளை
நீட்டச்சொல்லி தொடச்சொல்வார்.நியாயம் அவர் பக்கத்தில் இருந்தால் அந்தக்கம்பி சுடாது
அவர் அநியாயம் செய்பவராக இருந்தால் கம்பி சுடும்.சூடு தாங்க முடியாமல் அலறும் பக்தர்களை
பார்த்து என்ன அப்பு உண்மை சுடுதா என சிலேடையாக இவர் கேட்பதுண்டு.பின்பு அவரை மன்னித்து அவரின் குறைகளை விளக்கி அவரின் பிரச்னைகளிலிருந்து காப்பாற்றுவார்.மதுரையில் இவரை வழிபடும் பக்தர்கள் அதிகம் இவருக்கு ஒரு வழிபாட்டு மன்றம்
வைத்து வணங்கி வருகின்றனர்

இவரின் அற்புதங்கள்

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஒருமுறை ரயிலில் செல்லும்போது ஒரு வெள்ளைக்கார டிக்கெட்
பரிசோதகர் இவர் தோற்றத்தை பார்த்து அடிக்காதகுறையாக ரயிலில் இருந்து இறக்கி விட்டிருக்கிறார்.இவர் இறங்கியவுடன் அந்த ரயில் அசையவில்லை.ரயிலை என்னென்னவோ
முயற்சிசெய்தும் இயக்கமுடியாத சூழ்நிலை.என்ன செய்வதென்று தெரியாமல்.இறுதியில்
அந்த பரிசோதகர் தன் தவறை உணர்ந்து இவரை மீண்டும் ஏற்றியவுடன் தான் ரயில் கிளம்பி
சென்றுள்ளது.இதேபோல் காரைக்குடி அருகே குன்றக்குடி முருகன் கோவிலில் தேர்த்திருவிழாவில் இவர் இருக்க இவர் யாரென்று தெரியாமல் இவரை சிலர் தேரில் இருந்து
இறக்கிவிட்டு இருக்கின்றனர்.இவரை இறக்கியவுடன் தேர் அசையவில்லைதன் தவறை உணர்ந்து இவரை மீண்டும் ஏற்றியவுடன்தேர் சென்றுள்ளது இப்படி பல சித்து
விளையாட்டுக்களை புரிந்தவர் இவர்


திருப்பரங்குன்றம் என்ற ஊருக்குப் போய் அங்கிருந்த திருக்கூடல்மலையில் தங்கினார்.
அவர் அங்கிருந்தபடி பக்தி மார்க்கத்தைப் பரப்பினார். பல மகிமைகளை செய்தார். அந்த ஊரிலேயே பெரும் பணக்காரராக கருப்பண்ண கோனார் என்பவருக்கு பூர்வ ஜென்ம கர்ம வினையினால் வாழ்கை முடிய உள்ளது என்பதை தெரிந்து  கொண்டவர், கருப்பண்ண கோனார் வேண்டிக் கொண்டதினால் நாற்பத்தி எட்டு நாட்கள் தவம் இருந்து அவருடைய ஜென்ம கர்மாக்களை தன் மீது ஏற்றிக் கொண்டு அவருக்கு உயிர் பிச்சை தந்தாராம். கருப்பண்ண கோனாரே அந்த இடத்தில் சுவாமிகளின் உத்தரவின்படி ஆலயம் மற்றும் சமாதிகளைக் கட்டினாராம். அது போல வெகு காலம் ஆண் குழைந்தையே இல்லாமல் இருந்த ஒரு தம்பதியினருக்கு அவர்களுக்குப் பிறக்க உள்ள பத்தாவது குழைந்தையே ஆண் குழந்தையாக இருக்கும் எனக் கூற அப்படியே அது நடந்ததாம்.
அதன்பின் ஸ்வாமிகள் பல இடங்களுக்கும் விஜயம் செய்து பக்தி மார்க்கத்தைப் பரப்பியவண்ணம் பக்தர்களுக்கு அருளாசி தந்து அவர்களுடைய வாழ்க்கை பிரச்சனைகளை தமது சக்தியினால் தீர்த்து வைத்தார் . பல இடங்களில் வழிபாட்டு மன்றங்களை நிறுவினார்..
 மாயாண்டி  ஸ்வாமிகள் சன்னதி
இப்படியாகப் பல மகிமைகளை செய்து காட்டியவண்ணம் ஆன்மீகப் பயணத்தில் இருந்தவர் 1930 ஆம் ஆண்டு சமாதி அடைய அவருடைய சமாதி திருக்கூடல் மலையில் நிறுவப்பட்டது.

இவரது ஜீவசமாதி திருக்கூடல்மலை என்ற காகபுஜண்டர் மலையில் உள்ளது இது திருப்பரங்குன்றத்தில் உள்ளது. சமாதிக்கு செல்ல விரும்புவோர் இங்குள்ள தியாகராஜா கல்லூரியில் இருந்து எட்டும் தூரத்தில் இந்தமலை உள்ளது நடந்தே சென்றுவிடலாம்

Saturday, December 10, 2011

சனி தோஷம் சங்கடம் தீர்க்கும் ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவில்



எங்கள் ஊரான ராமநாதபுரம் நகரில் இக்கோவில் அமைந்திருக்கிறது. ராமநாதபுரம் பேருந்து நிலையத்திலிருந்து இந்தக்கோவில் மிக அருகில் உள்ளது சனிதோஷம் சனியால் அவதிக்குள்ளாவோர் இக்கோவிலின் ஸ்தலவிருட்சமாக உள்ள இந்தசாயா மரம் வேறு எங்கும் கிடையாது.இந்த மரம் சனீஸ்வரபகவானின் தாய் சாயாதேவி என்பவளாவாள். சனீஸ்வரனின் தாய் சாயாதேவியே இந்தமரமாக சொல்லப்படுகிறது

பொதுவாக கருணைவடிவானவர்களாக பெண்களை சொல்வதுண்டு .சாயாதேவியிடம் தன் கஷ்டங்களை சொல்லிவேண்டும்போது அவள் இரக்கப்பட்டு தன் மகனான சனீஸ்வரனிடம் சொல்வதுண்டு.சனீஸ்வரனும் தாய்மீது உள்ள மரியாதையால் பக்தர்கள் கிரக பலன்களை
குறைப்பார் என்றும் நம்பப்படுகிறது

எந்த கோவிலிலும் காணாத வகையில் விநாயகரும் முருகனும் சேர்ந்தே இந்தக்கோவிலில் இருப்பது சிறப்பு .முன்பு இந்த இடத்தில் சாயாமரத்தடியில் சிறியகோயிலாக முருகனும் விநாயகரும் இருந்து அருள்புரிந்தார்கள் இந்த இடத்திற்கருகே நீதிமன்றம் அமைந்திருந்தது
கோர்ட்டிற்க்கு செல்பவர்கள் இங்குள்ள முருகனை வழிபட்டு செல்வார்கள் கோர்ட்டில்  அவர்
பக்கம் நியாயமான தீர்ப்பு கிடைக்கும்.அதனால் மகிழ்ந்த ஒருவர் சிறியகோவிலாக எழுப்பினார்
பலரது முயற்சியால் இன்று பெரியகோவிலாக வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இங்குள்ள முருகனை வழிபடுவர்களுக்கு துணையாக நல்ல காரியங்களுக்கு வழிஅமைத்து கொடுப்பதால்
வழிவிடும் முருகன் கோவில் எனப்பெயர் வந்தது.

Wednesday, December 7, 2011

மேலுலகத்தில் சரஸ்வதிபூஜை கொண்டாடப்படும் விந்தை

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படவே இந்த தளம் தொடர்ந்து நடத்தப்படுகிறது.கடவுள் நம்பிக்கை அரைகுறையாக உள்ளவர்கள் முருகன்,விநாயகர்
அம்மன் போன்றோர் உள்ளனரா என நினைப்போரும் ஆவியுலகம் சம்பந்தப்பட்ட புத்தகங்களை
படிப்பதால் ஓரளவிற்க்கு கடவுள் பற்றிய தெளிவு பெறலாம்.சிஎம் .ரத்தினசாமி அவர்கள் எழுதிய‌
ஆவிகளுடன் நாங்கள்,நர்மதா பதிப்பகம் வெளியிட்டு ஆவியுலகத்தொடர்பும் ஆறுமுகக்கடவுளும்,முருகபெருமான் உரைக்கும் பூர்வஜென்மங்கள் இந்த புத்தகமெல்லாம்
வக்கீல் ஞானவேல் என்பவர் முருகக்கடவுளிடம் ஆட்டோ ரைட்டிங் முறையில் பேசி முருககடவுளுடனான அனுபவங்களை புத்தகமாகவெளியிட்டார் படித்தால் ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றுவிடுவீர்கள்.இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தார்போல் ஒரு புத்தகம் எனக்கு சமீபத்தில் கிடைத்தது இந்த புத்தகத்தை சிறுவயதில் நான் எங்கள் வீட்டில் பார்த்திருக்கிறேன் அப்போது இதைபற்றி எதுவும் தெரியாமல் விட்டுவிட்டேன்.சமீபத்தில்
ஆவியுலக ஆராய்ச்சியாளர் விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் பேட்டியை படிக்க நேர்ந்தது அதில்
அவருக்கு இந்ததுறையில் இன்ஸ்பிரேசனாக அமைந்த சில விஷயங்களை சொல்லியபோது
மதுரை முன்னாள் ஆதினம் 291வது குருமகா சன்னிதானம் ஞானசம்பந்த தேசிகபரமாச்சர்யார்
அவர்கள் எழுதிய இறந்தவர்கள் வாழும் நிலையும் பேசும் முறையும் என்ற புத்தகத்தை பற்றி
சொன்னார்அவர் சொன்னவுடன் அந்தபுத்தகத்தை நான் சிறுவயதில் எங்கள் வீட்டில் இருந்த ஞாபகம் வந்தது
ஆவியுலகம் சம்பந்தமாக தமிழில் வந்த முதல் புத்தகமாக இது இருக்கும் என்று நினைக்கிறேன்
அந்தபுத்தகத்தை மிக நீண்ட தேடுதலுக்கு பிறகு அந்தபுத்தகம் எனக்கு கிடைத்தது எங்கும் கிடைக்காத புத்தகம் அது.1976ல் ஆறாவதுபதிப்பாக அந்த புத்தகம் வெளிவந்துள்ளது அந்த புத்தகத்தில் உள்ள விஷயங்கள் என்னை ஆச்சரியத்தின் உச்சிக்கே கொண்டுசென்றன‌
அதில் மேலுலகத்தில் இறந்தவர்கள் சிவபூஜை செய்வதும் முதலில் ஆவிலோகமும் அதன்பிறகு
பிரம்மலோகமும்,அதன்பிறகு விஷ்ணுலோகமும்.அதன்பின்பு சிவலோகமும் உள்ள விஷயத்தை ஒரு சிறுமியின் ஆன்மா கூறும் விஷயத்தை கேட்டு ஆச்சரியமடைந்தேன் மேலும்
மேலோகத்தில் ஆயுதபூஜை கொண்டாடும் முறைபற்றியும் கூறியுள்ளார் உங்களுக்காக அந்த பகுதியை மட்டும் தருகிறேன்.பிக்சராகdouble click seydhu சேவ் செய்து ஜூம் செய்து படியுங்கள்

Monday, December 5, 2011

தமிழக கோவில்களும் அவற்றை சிறப்பாக பராமரிப்பவர்களும்



கோவில்கள்தான் ஒவ்வொருமனிதனின் மனநிம்மதிக்கு மருந்தாக உள்ளது கோவில்களில் போய் சாமிகும்பிடுவதோடு மட்டுமல்லாமல் கோவில்களை சிறப்பாக பராமரித்தால்தான்
கோவில்களில் தெய்வ வழிபாடு சிறப்பாக இருக்கும் தமிழ் நாட்டின் பெரும்பாலான கோவில்களுக்கு நான் சென்றபொழுது கோவில் கோவில் திருப்பணி கல்வெட்டை பார்ப்பேன்
நான் பார்த்த பெரும்பாலான கோவில்களில் திருப்பணி கல்வெட்டில் முதலமைச்சராக எம்.ஜி.ஆரும்.அறநிலையத்துறை அமைச்சராக  ஆர்.எம் வீரப்பன் அவர்களும் அறநிலையத்துறை ஐ.ஏ.எஸ் அதிகாரியாக திரு.ஆளுடையபிள்ளை அவர்கள் இவர்கள் மூவரின்
பெயர்தான் ஒவ்வொரு கோவில் கல்வெட்டிலும் பளிச்சிடுகிறது. இவர்கள் காலத்திற்க்கு பிறகு
நிறையக்கோவில்கள் திருப்பணிகள் செய்யப்படாமல் அப்படியே கிடக்கிறது.இது வருத்ததிற்குரிய விஷயமாகும்.தமிழக அரசு பராமரிப்பு இல்லாமல் இருக்கும் கோவில்கள் பற்றி
ஒரு கணக்கெடுத்து திருப்பணிகள் செய்ய முயற்சி எடுக்கவேண்டும்.தனியார்களை எடுத்துக்கொண்டால் திருவாவடுதுறை ஆதினம்,தருமபுரம் ஆதினம், போன்ற ஆதினத்திற்க்கு
சொந்தமான கோவில்கள் சிறப்பாக பராமரிக்கபடுகின்றன தஞ்சாவூர்.நாகை மாவட்டங்களில் பெரும்பாலான கோவில்கள் இவர்களது கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது

நகரத்தார்கள் என்று சொல்லகூடிய செட்டியார்கள் காரைக்குடி.தேவகோட்டை பகுதிகளில் அதிகம்.கவிஞர் கண்ணதாசன்,எஸ்.பி முத்துராமன்,பஞ்சுஅருணாசலம்,ராமநாராயணன்
தமிழ்வாணன்,ஏ.வி.எம்.லேனாதமிழ்வாணன் என்று இந்த இனத்தை சேர்ந்த வி.ஐ.பிகள்
அதிகம்.இவர்கள் காரைக்குடி.தேவகோட்டையை சுற்றிலும் கோவில்கள் அதிகம் கட்டி
திருப்பணிகள் செய்துள்ளனர்.இவர்கள் கோவில்களை சிறப்பாக பராமரிக்கின்றனர் இரண்டு நாட்களுக்கு முன்பு கூட ஒருவர் தேவகோட்டையில் முருகன் கோவில் கட்டி உள்ளார் கோவில்கள் அதிகம் கட்டி இந்து ச்முதாயத்தை வளர்ப்பதிலும் கோவில்களை சிறப்பாக‌
பராமரிப்பதிலும் இவர்களை மிஞ்ச ஆள் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து நான் சொல்வதை விட இப்பகுதியில் உள்ள கோவில்களை சுற்றிப்பார்த்தால் அப்படி ஒரு தெய்வாம்சம் இருப்பதை உணரமுடியும்.அவ்வளவு சிறப்பான நிர்வாகம்.திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவிற்க்கு அடுத்து தேவகோட்டை சிவன் கோவிலில் நடக்கும் கந்த சஷ்டி விழா மிக‌
பிரசித்தம் விழா 10 நாட்கள் சிறப்பாக நடக்கும் சூலமங்களம் சகோதரிகள்,எம்.எஸ் சுப்புலட்சுமி,
கே.பி சுந்தராம்பாள்,கிருபானந்த வாரியார்,சீர்காழி கோவிந்தராஜன் என இக்கோவில் கந்தசஷ்டி விழாவிற்க்கு வராத வி.ஐ.பிக்களே இல்லை பாரம்பரியமான விழாவாக இன்றும்
நடந்து வருகிறது.ராமேஸ்வரம் கோவில் உட்பட பல புகழ்பெற்ற கோவில்களுக்கு கூட இவர்கள்தான் பரம்பரை அறங்காவலர்களாக இருந்துவருகின்றனர்.இவ்வினத்தை சேர்ந்த
நீதியரசர் லட்சுமணன் கட்டிய  சாய்பாபா கோவில் கட்டி இரண்டுவருடந்தான் ஆகிறது
இந்த கோவில் தேவக்கோட்டையில் படு பிரசித்தம்.காரைக்குடி கொப்புடையம்மன்,பிள்ளையார்பட்டி போன்ற கோவில்களில் இவர்களின் திருப்பணிகள் அதிகம்.ஒருமுறை வாய்ப்புகிடைத்தால் காரைக்குடி,தேவகோட்டை பகுதிகளில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த பெரியகோவில்கள் அதிகம் தெரியாத சிறு கோவில்கள் முதலியவற்றுக்கு ஒரு விசிட் அடித்து வாருங்கள் தெய்வீக அனுபவத்தை நேரில் புரிந்து கொள்வீர்கள்.

Thursday, December 1, 2011

கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன்



சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் இருந்து  நாட்டரசன்கோட்டை செல்லும் வழியில்
உள்ளது இந்த கோவில் மெயின் ரோட்டில் இருந்து உள்ளே 2கிமீ சென்றால் இக்கோவிலை அடையலாம்

உக்கிரமான இந்த காளியம்மனை வழிபட்டால் நம் துன்பங்கள் அகழும். குறிப்பாக செய்வினை
செய்தோர்,அடுத்தவருக்கு துன்பம் கொடுப்பவர் முதலியவர்களுக்கு எதிராக நாம் வேண்டிக்கொண்டு இங்கு நமக்கு எதிரானவர்களுக்கு நம் பக்கம் நியாயம் இருக்கும் பட்சத்தில்
காசுவெட்டிப்போட்டுவிட்டு வருவதை தென்மாவட்டமக்கள் வழக்கமாக வைத்துள்ளார்கள்
காசுவெட்டிபோட்டுவிட்டு வந்தால் அவர்களுடனான உறவும் முறிந்து நமக்கு எதிராக தீங்கு
செய்தவர்களை வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்ற ரீதியில் அவர்களை துவம்சம் செய்து
விடுவாள் இந்தக்காளி செயிவினை,பில்லி,சூனியம் போன்றவற்றை பொடிபொடியாக்கிவிடுவாள் இந்த அம்மன்

Wednesday, November 30, 2011

சிவன் வானில் தோன்றும் காட்சி



தமிழ்நாட்டின் கோவில்கள் அதிகம் உள்ள பகுதியில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது இந்த வீடியோ வீடியோ தரம் தெளிவாக இல்லாவிட்டாலும் யூ ட்யூப்பில் பரபரப்பாக பார்க்கப்படும்
வீடியோவாக இது உள்ளது சிவனின் கண்கள் உலகத்தை பார்ப்பது போல் அமைந்துள்ளது
இந்த வீடியோ.

Tuesday, November 29, 2011

முருகப்பெருமான் கூறும் பூர்வஜென்ம கர்மாக்கள்



சென்றவாரம் திருவண்ணாமலை கிரிவலம் சென்றுவிட்டதால் தொடர்ந்து பதிவிடமுடியவில்லை .சிலநாட்களுக்கு முன் இணையத்தில் உலவிக்கொண்டு இருந்தபொழுது
நர்மதா பதிப்பகம் வெளியிட்ட ஆவியுலகக்கடவுள் முருகனுடன் ஒரு அட்வகேட்டின் அனுபவங்கள் என்ற நூலைப்பார்க்கமுடிந்தது.இலவச தரவிரக்கம் இந்தபுத்தகத்திற்க்கு கிடையாது காசுகொடுத்துத்தான் வாங்கவேண்டும்.இந்தபுத்தகத்தை வாங்கியே ஆகவேண்டும்
என்று எங்கள் ஊர் ராமநாதபுரத்தில் உள்ளபுத்தககடையில் சென்றுகேட்டேன் அங்கு அந்த புத்தகம்
இல்லை ஆர்டர் கொடுங்கள் ஒருவாரத்தில் வாங்கித்தருகிறேன் என்று கடையில் கூறியதால்
ஆர்டர்கொடுத்துவிட்டுவந்தேன்.சென்றவாரம் திருவண்ணாமலை செல்வதற்காக சென்னை செல்லும் சேது எக்ஸ்பிரஸை பிடிப்பதற்காக ரயில் நிலையத்தில் காத்திருந்தேன்.அப்போது
ஒரு அழைப்புவந்தது.நீங்கள் கேட்டபுத்தகம் வந்துவிட்டது வந்துவாங்கிகொள்ளுங்கள் என்று
புத்தககடையில் இருந்து கூப்பிட்டார்கள்.ரயில்வருவதற்க்கு ஒருமணிநேரம் இருந்தது.புத்தகத்தை வாங்கிவிட்டால் ரயிலில் படித்துக்கொண்டே செல்லலாம் என்றெண்ணி
புத்தகத்தை வாங்கசென்றுவிட்டேன் பத்து நிமிடத்தில் புத்தகம் வாங்கிக்கொண்டு ரயில்நிலையம்
வந்தேன் ரயில்வந்தவுடன் ஏறிஉட்கார்ந்து புத்தகம் படித்துக்கொண்டே சென்றேன் .முருகப்பெருமானின் அதிசயங்களை வரலாற்றில்தான் கேட்டிருக்கிறோம்.ஆனால் முருகப்பெருமான் நேரடியாகவந்து பேசி அருள்வாக்கு சொன்னவற்றையும்.அவரிடம் பிரச்னைக்கு காரணம் கேட்கும் மனிதர்களிடம் அவரின் கர்மாக்களை கூறுகிறார் படிக்க படிக்க
பரவசமாகவும் அதிசயமாகவும் இருந்தது.எதோ மர்மநாவலைபடிப்பது போன்று விறுவிறுப்பாக‌
சென்றதால் விடிந்து விழுப்புரம் ரயில் நிலையம் வந்ததே தெரியவில்லை கடவுள் மீது வெறுப்பில் உள்ளவர்கள்,கடவுள் மீது அரைகுறை நம்பிக்கையுள்ளவர்கள் என அனைவரும்
படிக்கவேண்டிய புத்தகம் பொதுவாக கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் படித்தவர்கள் படித்தால்
நூற்றுக்கு நூறு கடவுளை நம்பிவிடுவார்கள்.இந்த புத்தகத்தை எழுதியவர் தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த வக்கீல் ஞானவேல் என்பவர் ஆவார் இவர் ஆவியுலகக்கடவுள் முருகனிடம் அற்புதமாக பேசி நம் முன் ஜென்ம கர்மாக்களையும் அதனால் நாம் இப்பிறவியில்
கஷ்டப்படுவதையும் அதற்க்கு முருகப்பெருமான் கூறும் காரணங்களையும் செய்யவேண்டிய‌
பரிகாரங்கள் பற்றியும் கூறுகிறார். இந்த இமேஜை க்ளிக் செய்து ஒரு சிறு பகுதியை மட்டும் படிக்க‌
புத்தகம் வேண்டுவோர் நர்மதா பதிப்பகம் சென்னையில் வாங்கலாம் வி.பி.பியிலும் வாங்கலாம்
குறிப்பு; இமேஜை ரைட் கிளிக் செய்து சேவ் இமேஜ் அஸ் செய்து ஜூம் செய்து படிக்கவும்


Sunday, November 20, 2011

ராகவேந்திர சுவாமிகளின் ஆவி

வள்ளிமலை முருகன்


கோவில் கிரிவலப்பாதையில்

பாம்பன் சுவாமிகள் அவர்களின் ஆன்மா தோன்றிய புகைப்படத்தை பார்த்து

பரவசமுற்றேன் .இதை பார்த்தவுடன்

நான் சமீபத்தில் படித்த ஒரு புத்தகத்தில் உள்ள சில தெய்வீக ஆன்மாக்களை

பற்றி பகிர்ந்து கொள்ளவேண்டும்

என்று ஆசைப்பட்டு இதை எழுதுகிறேன்.







ராகவேந்திர சுவாமிகள் சமாதி அடைந்துள்ள மந்திராலயத்தையும் அதனை சார்ந்த

இடத்தையும் திரும்ப‌

பெறுவதற்காக பிரிட்டிஷ் அரசாங்கம் தாமஸ் மன்றோ என்ற ஆங்கில கவர்னரை

அனுப்பியது .மன்றோ

பிருந்தாவனத்தை நெருங்கியதும் அவர் எதிரே ராகவேந்திரசுவாமிகள் ஆவியுடலில்

வெளிப்பட்டார்

சில நிமிடங்கள் மன்றோவுடன் ஆங்கிலத்தில் உரையாடினார் இந்தசம்பவம் மன்றோவின் மனதை

மாற்றிவிட்டது ராகவேந்திரசுவாமிகள் ஆவி வடிவில் காட்சி அளித்ததை அவரே

தன் கைப்பட எழுதி

வைத்துள்ளார்



அன்வாரிமாதவராவ் என்ற முன்னாள் எம்.பி ஒரு சமயம் அமெரிக்காவில்

நியுயார்க் நகரில் தங்கி இருந்தபோது

அவருக்கு மார்புவலிகண்டது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்

பிழைக்கமாட்டார் என்று முடிவு செய்து

விட்டனர்.இப்படி கைவிடப்பட்ட கேஸ்களை ஒதுக்கிவைத்து ஒரு அறையில்

போட்டுவிடுவார்கள்.இவரது

உடலும் அவ்வாறு கிடத்தப்பட்டது.நள்ளிரவில் கண்விழித்த மாதவராவ் தாம்

பிணங்களின் நடுவே இருப்பது

கண்டு அதிர்ச்சி அடைந்தார் துக்கம் தாங்காமல் ராகவேந்திர சுவாமிகளை

நினைத்து பிரார்த்தித்தார்.பாதுகைகளின்

ஒளி கேட்டு நிமிரந்த மாதவராவ் தன் முன்னே ராகவேந்திரர் நேரில் வருவதை

கண்டு மகிழ்ச்சி அடைந்தார்

சுவாமிகள் அவரது உடலை மூன்று முறை தடவி கொடுத்து நோய் குணமாகி விடும் என்று சொல்லி

அபயம் அளித்துவிட்டு மறைந்துவிட்டார்.மறுநாள் அறையில் ஆரோக்கியமான நிலையில் இருந்த‌

இவரை பார்த்துவிட்டு மருத்துவர்கள் ஆச்சரியம் அடைந்தனர் இந்த விஷயத்தை இன்றும் நோய்

தீர்த்த தென்னிந்திய மகான் என்ற தலைப்பில் மருத்துவமனை பதிவேட்டில்

எழுதிவைத்துள்ளனர்.

THANKS;NARMADHA PIRASURAM AVIGALUDAN NANGAl

BOOK.

Thursday, November 17, 2011

அதிசயங்களை நிகழ்த்தும் மதுரை பாண்டி கோவில்



மதுரை என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது மீனாட்சிஅம்மன் கோவில் அதையும்
தாண்டினால் அழகர்கோவில் அதையும் தாண்டி மதுரைக்கு புகழ்சேர்க்கும் கோவில் பாண்டி முனீஸ்வரர் கோவில்.



. பாண்டியமன்னன் நெடுஞ்செழியன்  இங்கே முனியாக மாறி நின்றுவிட்டதாகவும்  அங்கேயே தமக்கு கோவில் அமைத்து மக்களை காக்க‌
வகைசெய்யவேண்டும் என்று கோரியது.அதே இடத்தில் கோவில் அமைக்கப்பட்டு இன்றளவும்
மதுரை மட்டுமல்லாமல் சுற்றுவட்டார மாவட்டங்களான திண்டுக்கல்,விருதுநகர்,சிவகங்கை,இராமநாதபுரம்,தேனி மாவட்டங்களில் இருந்து கட்டுக்கடங்காமல் கூட்டம் வந்துகொண்டே இருக்கிறது.தங்கள் குலதெய்வம் அறிய முடியாதவர்கள் இவரையே குல தெய்வமாக வணங்குகின்றனர்.எல்லா நாட்களும் இங்கு உள்ள‌
மண்டபங்கள்.தங்குமிடங்கள் நிறைந்தே காணப்படுகின்றன.முகூர்த்தநாட்களில் ட்ராபிக் ஜாம் ஆகி விடும் அளவிற்கு இங்கு கூட்டம் கூடும்.
கரூர் அருகே உள்ள நெரூர் கிராமத்தில்பஞ்சம் பிழைப்பதற்காக  முத்தரையர் வம்சத்தைச் சேர்ந்த வள்ளியம்மை பிழைப்பு தேடி மதுரை மாநேரியில் குடியேறினார். வள்ளியம்மை கனவில் பலமுறை சாமி வந்து, மேலமடை கிராமத்தில் தான் புதைந்திருக்கும் இடத்தைச் சொல்லியது. ஆனா அந்த அம்மா கனவை பெருசா எடுத்துக்கல. ஆனா கனவு தொடர்ந்து வரவும் கிராம மக்கள்கிட்ட இந்தக் கனவைச் சொல்லியிருக்கார். உடனே வண்டியூர், உத்தங்குடி, கருப்பாயூரணி கிராம மக்களோட மேலமடை மக்களும் சேர்ந்து வள்ளியம்மை கனவில் சாமி சொன்ன இடத்தைத் தோண்டியபோது, உருட்டிய விழிகள், முறுக்கிய மீசை, அடர்ந்து நீண்டு வளர்ந்த ஜடாமுடியோடு சம்பணமிட்ட தவக்கோலத்தில் சாமி சிலை கிடைத்தது. அந்த சிலையை வெளியே எடுத்து, ஒரு குடிசை போட்டு சிலையை வைத்து கும்பிடத் தொடங்கினார்கள். ஜடாமுனீஸ்வரர் கோவில் என மக்கள் மத்தியில் பிரபலமானது. வள்ளியம்மை அம்மாதான் பூசாரியாக இருந்தார்.

அப்போது அடர்ந்த காட்டுப்பகுதியாக- நடக்கக்கூட சரிவர பாதையில்லாத காலம். கம்பீரமாக இருக்கிற ஜடாமுனியைப் பார்த்து மக்கள்- குறிப்பாக குழந்தைகள் அச்சப்பட்டதாம். நீண்டு வளர்ந்த ஜடாமுடியைப் பார்த்து சாமியை இரும்புச் சங்கிலியால் கட்டி வைத் திருப்பதாக மக்கள் நினைத்துக் கொண்டார்கள்.

சிறப்புகள்: ஏற்கனவே கூறியபடி இங்கு பாண்டியமன்னன் நெடுஞ்செழியனே தர்மமுனீஸ்வரராக‌
இருந்து ஆட்சி புரிகிறார் அதுமட்டுமல்லாமல் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் மட்டுமல்லாது
அந்த வழியாக செல்லும் இறைநம்பிக்கையுள்ள பக்தர்களிடம் அதிக திருவிளையாடல்களை
நடத்துவார்.இப்பொழுதும் அதிகம் பேர் இவரை நேரில் பார்த்துஇருப்பதாக சொல்கிறார்கள் வயதானவர் வேடத்தில்தான் இவர் அதிகம் தோன்றுவதாக மக்கள் கூறுகின்றனர் துயரங்களோடு
வரும் உண்மையான பக்தர்களுக்கு இவர் வெறும் சிலையாக மட்டுமல்லாமல் நேரிலே வந்து
பிரச்சினைகளை தீர்த்துவைப்பவர்.இந்த கோவிலுக்கு வந்து முழுமனதோடு வழிபட்டு சென்றால்
வெற்றிநிச்சயம்.

இரவு நேரத்தில் இவ்வழியாக வந்த ஒருவரின் வண்டி ஏதோ ஒரு காரணத்தால் ஸ்டார்ட் ஆகாமல் நின்றுவிட்டது.அவரும் அதிக நேரம் முயற்சி செய்துவிட்டு சோர்வடைந்து விட்டார்
அந்த நேரத்தில் இங்கு வந்த ஒரு வயதான பெரியவர் என்னப்பா வண்டி ஸ்டார்ட் ஆகலையா
என கேட்டிருக்கிறார் ஆம் என இவர் சொல்ல வண்டிச்சாவியை கீழே போட்டு எடு என சொல்லி
இருக்கிறார் வண்டிச்சாவியை மண்ணில் போட்டு எடுப்பதற்குள் அவரை காணவில்லை
இப்பொழுது வண்டி எந்த சேட்டையும் பண்ணாமல் ஸ்டார்ட் ஆகியிருக்கிறது  இது போல பல‌
அதிசயங்களை தினமும் நிகழ்த்திகொண்டிருக்கிறார்.இன்றும் கரூரில் இருந்து வந்தவர்களின்
வம்சாவழிகளே கோவிலில் பூஜை செய்கின்றனர்,இந்தகோவிலுக்கு ஒருமுறை சென்று உங்கள் மனபாரங்களை கொட்டுங்கள் உங்கள் துயரங்களில் இருந்து உங்களை நிச்சயம் அந்த‌
பாண்டிமுனீஸ்வரர் காப்பார்

செல்லுமிடம்:மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து இராமேஸ்வரம்,திருநெல்வேலி செல்லும் பாதையில் இந்த கோவில் உள்ளது. ஆட்டோவில்
மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து சென்றால் 50 ரூபாய் கேட்பார்கள்

Wednesday, November 16, 2011

பாம்பன் சுவாமிகளின் ஆன்மா வானில் தோன்றும் காட்சி



வழக்கக்கம்போல் மீண்டுமொரு அதிசயசெய்தியை தருகிறேன் கடவுள் இருக்கிறார் என்பதை
நிரூபிக்கும் அற்புதங்கள் ஏராளம் நடந்துவரத்தான் செய்கிறது.முருகன் மீது பல பாடல்கள் பாடியவரும் 85 ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்த பாம்பன் சுவாமிகளின் ஆன்மா வானில்
தோன்றியதைத்தான் கீழே பார்க்கிறிர்கள்.  நண்பர் ரிஷி அவர்கள் லைவிங் எக்ஸ்ட்ராவில் இது பற்றி ஒருகட்டுரை வெளியிட்டு இருக்கிறார்கள் அதைப்பார்ப்பதற்க்கு இங்கு சொடுக்குக‌

Tuesday, November 15, 2011

யாகத்தில் தெரியும் வராஹி அம்மன் உருவம்






காரைக்காலை சேர்ந்தவர் பேராசிரியர் பண்டரிநாதன் இவர் பவுர்ணமிதோறும் நடத்தும் யாகம்
இப்பகுதியில் பிரசித்தம் இவர் கோரக்கசித்தரின் அருள்கொண்டு இந்த யாகத்தை நடத்துகிறார்
இந்த யாகத்தீயில் எல்லா தெய்வங்களும் எழுந்தருளுவதாக நம்பப்படுகிறது.குறிப்பாக வராஹி
அம்மன் உருவம் எழுந்தருளியதை புகைப்படமாகவும் வீடியோவாகவும் வெளியிட்டுள்ளார்கள்
எவ்வளவு கடுமையான தோஷக்குறைபாடு உள்ளவர்களும் இந்த யாகத்தில் கலந்துகொண்டு
பயன்பெறலாம்.முதலில் முன் அனுமதி பெற வேண்டும் இதற்கென பிரத்யேகமாக உள்ள வெப்சைட் லிங்குக்கு இங்கு சொடுக்குக

Monday, November 14, 2011

பிரதோஷ நேரத்தில் அம்மா என்றைழைத்த நந்தி



பரந்து விரிந்த இந்த உலகத்தில் ஆன்மிக அதிசயங்களுக்கு பஞ்சமில்லை அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏதாவது அதிசயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.அப்படிப்பட்ட அதிசயங்களுள் ஒன்றுதான் தமிழ்நாட்டில் நாகர்கோவில் அருகேயுள்ள அழகிய பொன்னாக்குடி
என்ற ஆலயம்.இங்கு சிவபெருமான் அருணாச்சலேஸ்வரராக அருள்பாலிக்கிறார்.இந்த கோவில்
வழியாகத்தான் நாம் தெய்வமாக கும்பிடும் பசுவை கேரளாவுக்கு இறைச்சிக்காக கொண்டு
செல்வது வேதனைக்குறியது.இதைப்பார்க்காமல் இந்த கோவிலில் இருக்கும் நந்திக்கே மனது
பொறுக்கவில்லையோ என்னவோ கடந்த 2002ம் ஆண்டு ஜனவரி 26ம்தேதி நடந்த சனிப்பிரதோஷத்தின் போது அம்மா என்று இந்த கோவிலில் உள்ள நந்திவாய்விட்டு கத்தியதாக இங்குள்ள மக்கள் அனைவரும் சொல்கிறார்கள் .இப்போது அந்த கோவில் புகழ்பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது.இந்த கோவில் திருப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது
திருப்பணிக்கு உதவுபவர்களும் மேலும் இந்த கோவில் பற்றி தெரிந்துகொள்ள விரும்புபவர்களும் இங்கு சொடுக்குக அடுத்த லிங்குக்கு இங்கு சொடுக்குக‌
யாகத்தில் தெரிந்த நந்தி பற்றி அடுத்து ஒரு பதிவில் பார்ப்போம்

மங்கள நாயகி கண்ணகி கோயில்





மதுரையை அழித்த கண்ணகி ஆக்ரோஷத்துடன் சென்றாள் அப்படி சென்றவள் ஒரு மலைப்பாங்கான இடத்தில் நின்றுகொண்டிருக்கும்போது வானில் இருந்து கோவலன் வந்து
ஒரு ரதத்தில் கண்ணகியை ஏற்றிக்கொண்டு வானுலகம் சென்றதாக கூறப்படுகிறது.இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சில ஆதிவாசிகள் இளங்கோவடிகளிடம் கூறி அவர் எழுதிய சிலப்பதிகாரத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.அந்த இடமே பின்னாளில் கண்ணகி கோவிலாக‌
மாறிப்போனது சுமார் 2000ம் ஆண்டுகள் பழமையான இந்த கோவில் தமிழக கேரள எல்லையில்
உள்ளது.சமீபகாலமாக தமிழ்நாட்டிற்க்கு சொந்தமான இந்தகோவிலை கேரளா தனக்குத்தான்
சொந்தம் என உரிமை கொண்டாடி வருகிறது.வருடத்திற்கு ஒருமுறைசித்ரா பவுர்ணமிஅன்று மட்டுமே திறக்கப்படுகிறது இந்தகோவில் .3நாட்கள் ஆரம்பத்தில் கொண்டாடி வந்த இந்த விழா
இப்போது கேரளா அரசின் கெடுபிடிகளால் 1நாளாக குறைந்துவிட்டது,நீங்களும் ஒரு வருடம்
கண்ணகி கோவிலுக்கு சென்று கண்ணகி அருள் பெற்று இன்புற வாழுங்கள்

செல்லும் வழி:தேனி மாவட்டம் கூடலுரிலிருந்து பளியன்குடி என்ற இடத்திலிருந்து 7கிமீ மலைப்பாதையில் நடந்து செல்ல வேண்டும் கடுமையான பயணத்திற்க்கு பிறகே இக்கோவிலை
அடைய முடியும்

Sunday, November 13, 2011

நாத்திகரை ஆத்திகராக மாற்றிய சந்திரசூடேஸ்வரர்.




ஓசூர் நகரின் மையத்தில் மலைமேல் சந்திரசூடேஸ்வரர் கோவில் உள்ளது. சந்திரசூடேஸ்வரர்
உடன் அம்பிகை மரகாதாம்பிகையாக காட்சி தருகிறாள்.இந்த கோவில் 1500 ஆண்டு பழமையானது.பொதுவாக சதுரகிரி,பர்வதமலை,திருவண்ணாமலை போன்ற மலைக்கோவில்களில் மக்கள் கூட்டம் அலைமோதுவதுண்டு.இந்த கோவில்களை பற்றி சில‌
அதிசய சம்பவங்கள் கூறப்படுவதுண்டு.இந்த கோவில்களைபோலவே மலை மேலிருக்கும் சந்திர சூடேஸ்வரர் சிவன் கோவிலும் சில அதிசயங்களை நிகழ்த்திய கோவில். சில வருடங்களுக்கு முன் அதாவது 73அல்லது 74ம் வருடமாக இருக்கும் என்று நினைக்கிறேன்
எனது தாத்தா[அம்மாவின் அப்பா] வீரப்பன் நடமாடிய காட்டுப்பகுதிகளான தாளவாடி தர்மபுரி
,கிருஷ்ணகிரி மாவட்டத்தை ஒட்டிய காட்டுப்பகுதிகளில் அரசு டெபுடி சர்வேயராக பணியாற்றி
84ம் ஆண்டு ஓய்வுபெற்றவர்.சிறுவயதிலேயே பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு தீவிர‌
நாத்திகவாதியாக இருந்தவர்.நாத்திகவாதியாக இருந்தாரே ஒழிய மிக அமைதியான நல்ல மனிதர்.ஒருமுறை முகத்தில் சின்னக்கட்டி ஒன்று ஏற்பட்டிருக்கிறது சாதாராண கட்டி என்று
தாத்தாவும் விட்டுவிட கட்டி மிகவும் பெரியதானது.டாக்டரிடம் காண்பித்ததற்க்கு அறுவை சிகிச்சைதான் செய்யவேண்டும் என்று கூறிவிட்டார்.நடுத்தரவர்க்கத்தை சேர்ந்த என் தாத்தா
சம்பளத்தை இதற்க்கு செலவழித்துவிட்டால் இந்த மாதம் தேவகோட்டையில் இருக்கும்
தனது வீட்டுக்கு எப்படி பணம் அனுப்புவது.இந்த மாதசம்பளத்தை நம்பி வீட்டில் காத்திருப்பார்களே என எண்ணி கவலையோடு தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரிக்கு
சென்று இருக்கிறார்.அப்போது பக்கத்தில் உள்ள ஒரு பெரியவர் இவர் முகவாட்டத்தை வைத்து
என்ன கவலையாக இருக்கிறீர்களே எனக்கேட்டுள்ளார்.எனது தாத்தா விஷயத்தை சொல்ல,அந்தபெரியவர் கேட்டிருக்கிறார் இவ்வளவு நாள் கிருஷ்ணகிரியில் இருக்கிறீர்களே
என்றைக்காவது ஓசூர் மலையில் இருக்கும் சந்திரசூடேஸ்வரரை சென்று வணங்கியுள்ளீர்களா
என கேட்டுள்ளார்.எனது தாத்தாதான் நாத்திகம் பேசுபவராயிற்றே இல்லை என பட்டென்று எனது
தாத்தா சொல்ல .உடனே அந்தபெரியவர் ஒரு நாட்டுமருந்தின் பெயரைசொல்லி உடனே அதை
தேடி அந்த மருந்தை உபயோகியுங்கள்.உடனடியாக சென்று ஓசூரில் இருக்கும் சந்திர சூடேஸ்வரர் கோவிலை வணங்கும்படி சொல்லிவிட்டு அடுத்து உனக்கு பிறக்கும் குழந்தைக்கு
அவர் பெயரையே வை எனக்கூறிவிட்டு அடுத்து வந்த பஸ்ஸ்டாப்பில் சட்டென அந்த பெரியவர்
இறங்கிவிட்டாராம்.இதை முழுவதும் நம்பாத எனது தாத்தா கோவிலுக்கு  அரைகுறை மனதுடன் சென்றிருக்கிறார்.சென்று விட்டு வந்து அடுத்தநாள் காலையில் ஆச்சரியத்தக்க‌
வகையில் வீக்கம் குறைந்திருந்தது.இதைப்பார்த்ததும் தாங்கமுடியாத ஆச்சரியம் எனது
தாத்தாவுக்கு.அத்தோடு நிற்காமல் அவர் சொன்ன மருந்தையும் உபயோகித்து எண்ணி 5 நாட்களில் எந்த வித அறுவை சிகிச்சையில்லாமல் முற்றிலும் குணமடைந்து விட்டார்
அத்தோடு நாத்திகம் பேசுவதற்கு முழுக்குபோட்டுவிட்டு தீவிர ஆத்திகராக மாறிவிட்டார்
அத்தோடு கடைசியாக பிறந்த என் மாமாவுக்கு சந்திரசூடேஸ்வரன் எனப்பெயர் வைத்தார்
தென்மாவட்டங்களில் இந்த பெயர் அதிகம் அறியப்படாத பெயர் என்பதால் பெயருக்கான‌
விளக்கம் கேட்டு என் தாத்தா எனக்கு சொன்னகதை இது.தற்போது தள்ளாடிய நிலையில் 87வயது ஆகும் என் தாத்தா இந்த வயதிலும் காலையில் எழுந்து குளித்துவிட்டு அதிக நேரம்
பூஜை புனஸ்காரங்களை முடித்துவிட்டுத்தான் காலை உணவைத்தொடுவார்.சந்திரசூடேஸ்வரர் பெயரைக்கொண்டஎனது மாமாவும் தற்போது சிங்கப்பூரில் நல்ல நிலையில் சம்பாதித்து நல்ல நிலையில் உள்ளார் நடந்த அந்த நிகழ்ச்சியை இன்னும் ஒரு தெய்வச்செயலாகவே நினைக்கிறார்எனது தாத்தா
.அந்த சிவபெருமான்
நம்பியவரை மட்டுமல்ல ஆண்டவன் படைப்பில் அனைவரும் ஒருவரே என்ற கொள்கைகேற்ப ஆண்டவனை நம்பாத எனது தாத்தாவையும் கைவிடவில்லை எல்லாம்
வல்ல அந்த ஈசன்.

Friday, November 11, 2011

நாடிஜோதிட அதிசயங்கள்&உண்மைகதைகள்



நாடி ஜோதிடத்திற்க்கு சிறப்பான இடமாக கருதப்படுவது நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவில் ஆகும்.இங்கு சிறப்பாக நாடி ஜோதிடம் பார்த்த பெரியவர்கள் சிலர்
இருந்தனர்.அவர்களில் பலர் மறைந்துவிட்டனர்.தற்போது எல்லா தொழிலிழும் போலிகள்
மலிந்துவிட்டதை போல் இதிலும் போலிகள் பெருகிவிட்டனர்.இருந்தாலும் வைத்தீஸ்வரன்கோவில்,திருச்சி திருவானைக்கோவில் போன்ற இடங்களில் நாடி ஜோதிடம்
குடிசைத்தொழில் போல வேகமாக வளர்ந்து இதில் போலி யார் உண்மை யார் என்று கண்டு பிடிக்க முடிவதில்லை.இருந்தாலும் தமிழ்நாட்டில் சென்னையில் அய்யா ஹனுமத்தாசன்
என்பவர் நாடிஜோதிடத்தில் மிகத்துல்லியமாக பலன்களை சொல்லி வரும் வாடிக்கையாளர்களை அசத்தி வந்தார்.சென்னை துறைமுகத்தில் வேலை செய்துகொண்டே
நாடி ஜோதிடம் பார்த்து வந்தார்.பழகுவதற்க்கு இனிமையானவர்.இவர் தன்னிடம் நாடி பார்க்க‌
வந்தவர்களின் கதையை வைத்து நாடி ஜோதிட கதைகள் என்ற பெயரில் தினத்தந்தி இதழில்
வெளிவந்த‌துஇந்த கதைகளை அம்மன் ப்
ப‌திப்பகம் புத்தகமாக வெளியிட்டது.அந்த புத்தகத்தையோ தினத்தந்தி
கதைகளையோ படிக்காதவர்களுக்காக நட்பு எனும் வலைதளத்தில் அனைத்து கதைகளும் கொடுக்கப்பட்டுள்ளது.அந்த கதைகளை படிக்கhttp://www.natpu.in/?category_name=josiamசொடுக்குக‌

Tuesday, November 8, 2011

உத்திரகோசமங்கை



இந்த கோவிலில் மங்களநாதர்,மங்களாம்பிகையும் காட்சியளிக்கின்றனர் பிரதோஷத்தன்று
இங்கு தாழம்பூ வைத்து வழிபடுகின்றனர்.இந்த கோவிலில்சிவனுக்கு அம்பாளுக்கு தாழம்பூ மாலை கட்டிப்போட்டால் அனைத்து தோஷங்களும் நீங்குவதாக ஐதீகம்.சிதம்பரம் கோவில்
தோன்றியதற்கு முன்பே இக்கோவில் தோன்றியதாக வரலாறு.இங்கு முக்கியமான விஷயமே
இங்கு உள்ள மரகதநடராஜர் சன்னிதி சிறப்பு வாய்ந்தது ஆசியாவிலே எங்கும் மரகத நடராஜர்
கிடையாது இங்கு மட்டும்தான் உள்ளது.மரகதத்துக்கு அதிர்வை தாங்கும் வசதியில்லையாதலால் இங்கு மேளம் அடிக்கப்படுவதில்லை வருடம் முழுவதும் சந்தனம் பூசப்பட்டிருக்கும் மார்கழியில் வரும் திருவாதிரை அன்று மட்டுமே மரகத நடராஜர் சிலையை
தரிசிக்க முடியும் மற்ற நாட்களில் சந்தனம் பூசிய நடராஜரைத்தான் தரிசிக்க முடியும்.இங்கு மற்றுமொரு ஆதிகாலத்து வராஹி கோவில் உள்ளது இங்கு ஒவ்வொரு வெள்ளி,செவ்வாய்.ஞாயிறு தினங்களில் ராகுகாலத்தில் பூஜை தொடர்ந்து செய்தால் தீராத பிரச்னைகள்,திருமண்த்தடை போன்றவை விலகுகின்றன.இன்னும் இந்த வருடம் மார்கழி
மாத திருவாதிரை அன்றுமரகதநடராஜரை தரிசித்து வாழ்வில் ஏற்றம் பெறுக.

குறிப்பு: திருவாதிரை அன்று கோவிலில் அதிக‌ கூட்டம் இருக்கும் காலை பத்து மணியில் இருந்து மரகதநடராஜரைப்பார்க்கலாம்.இரவு 3மணிக்கு மேல் சந்தனம் பூசிவிடுவார்கள்
பிறகு அடுத்த வருடம்தான் மரகத நடராஜரை தரிசிக்க முடியும் அதனால் இரவு சாமி தரிசனம்
செய்யும்போது வரிசையில் அதிகநேரம் நிற்கவேண்டியதிருக்கும் கூட்டமும் கட்டுக்கடங்காமல்
இருப்பதால் சில நேரம் அதிக தொலைவில் இருந்து வந்து இருப்பவர்கள் மரகதநடராஜரை பார்க்காமலே சந்தனம் பூசப்பட்ட நடராஜரை பார்த்து செல்ல வாய்ப்பு உண்டு இந்த ஏமாற்றத்தை
தவிர்க்க காலையில் வந்துவிட்டால் கூட்டம் சற்று குறைவாக இருக்கும் நேரத்தில் மரகதநடராஜர் தரிசனத்தை எவ்வித சிரமமும் இன்றி தரிசித்து விட்டு செல்லலாம் வயதானவ்ர்கள் குழந்தைகள் வைத்திருப்பவர்கள் மேற்ச்சொன்ன நேரத்திற்க்கு வருவது சாலச்சிறந்தது.ஏனென்றால் மார்கழி மாத கடுமையான பனியாதலால் கூட்டத்தில் குளிரை
தாங்கி கொண்டு நிற்பது சிரமம் இராமநாதபுரம் மாவட்டத்தில் இக்கோவில் உள்ளதால் நானும்
இதற்கு 8கிமீதொலைவில் உள்ள திருப்புல்லாணியில் உள்ளதால் அனுபவத்தில் சொல்கிறேன்.ராமேஸ்வரம் வருபவர்கள் இந்த கோவிலுக்கு செல்லலாம்


செல்வது எப்படி;ராமநாதபுரம் வந்து அங்கிருக்கும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து
அடிக்கடி உத்திரகோசமங்கைக்கு பஸ் உண்டு விழா நாளான‌ திருவாதிரை 
அன்றுஅதிக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதுண்டு.


Monday, November 7, 2011

ஒம் சிவ சிவ ஓம்



இப்பிறப்பை பூமியில் எடுத்த நாம் பலவித இன்னல்களுக்கு ஆளாகிறோம் கடுமையான‌
பாவங்களை முற்பிறவியில் செய்ததால் இப்பிரச்னைகளுக்கு ஆளாகின்றோம் கடுமையான‌
பிரச்சினைகளின் துயரத்தை போக்கவே எனது நண்பரும் ஆன்மிகக்கடல் இணையதளம் வைத்திருப்பவருமான ஆண்டாள் பிறந்த srivilliputthur
ஐ பிறப்பிடமாக கொண்ட நண்பர் வீரமுனி அவர்களின் குருவுமாகிய புளியங்குடி திரு.சிவ.மாரியப்பன் அவர்களின் குரு திரு.மிஸ்டிக் செல்வம் அய்யாவின் ஆன்மிக ஆராய்ச்சியில் உருவான மந்திரமே இந்த மந்திரம் இந்த மந்திரம் பற்றி முழுவிளக்கத்தை இந்த‌
நோட்டீஸை பார்த்து தெரிந்து கொள்க இந்த நோட்டீஸை அப்படியே பிரிண்ட் எடுத்தோ 1000,2000,
நோட்டீஸாகவோ அச்சடித்து உங்கள் ஊரின் பழமையான சிவன் கோவில்களில் நடக்கும் பிரதோஷ நாட்களிலும் மற்றும் அனைத்து விஷேச நாட்களிலும் கொடுத்தால் பகலவனை
கண்ட பனி போல நம் பிரச்சினைகள் அனைத்தும் பனியாய் கறைந்து விடும் வாருங்கள் சிவ சேவையில் பங்கெடுங்கள் நோட்டீஸ் கொடுப்பதோடு நிறுத்திவிடாமல் அதில் இருக்கும் விஷயங்களை நீங்களும் செயல்படுத்த முயற்சி செய்யுங்கள்


Saturday, November 5, 2011

அய்யப்பவிரதமும் சில அயோக்கிய பக்தர்களும்

இன்னும் சில நாட்களில் கார்த்திகை மாதம் துவங்கி விடும் கார்த்திகை துவங்கிவிட்டாலே அய்யப்பனுக்கு மாலை போடும் கூட்டம் அதிகரித்துவிடும்.ஒரு காலத்தில் தேகசுத்தியுடனும்
ஒழுக்கத்துடனும் கடைபிடிக்கப்பட்டு வந்த அய்யப்ப பூஜை .தற்போது போலிகள் நிறைந்துவிட்ட‌
இவ்வுலகத்தில் கேலிக்கூத்தாகிவிட்டது.சிறந்த ஒழுக்கமான அய்யப்ப பக்தர்கள் நிறைய பேர்
தற்காலத்தில் அதிகம் பேர் இருக்கத்தான் செய்கின்றனர்.சென்ற வருடம் கார்த்திகை மாதம் 1ம் தேதி தூங்கி எழுந்து குளித்து விட்டு வெளியே வந்தவுடன் நான் பார்த்த முதல் சாமியே போலிச்சாமிதான் வருடம் முழுவதும் தண்ணி அடிக்கின்றனர் பான்பராக்,குட்கா,சிகரெட்,பீடி
போன்ற போதை வஸ்துக்களை உபயோகிக்கின்றனர்.அடுத்தவன் நிலத்தை அபகரித்து ரியல்
எஸ்டேட் தொழில் செய்கின்றனர் கந்துவட்டிக்குபணம் கொடுத்து பல ஏழைகள் வயிற்றில்
அடிக்கின்றனர்,கட்டியமனைவி,பிள்ளைகளை விட்டுவிட்டு அடுத்தவர்களோடு கள்ளத்தொடர்பு
வைத்துக்கொள்கின்றனர்.ஆடு,கோழி இல்லாமல் ஒரு நாளும் இவர்கள் சாப்பிடுவதில்லை
இந்த லட்சணத்தில் இவர்களெல்லாம் மாலைபோட்டால் எப்படியிருக்கும்.ஆனால் மேற்கூறிய‌
காரணம் உடையவர்கள் தான் முதலில் மாலை போடுகின்றனர். மேற்கூறிய‌
குற்றங்களை விரத காலம் முழுவதும் செய்யாமல் இருக்கும் பக்தர்களும்சிலர் இருக்கின்றனர்.

ஆனால் மாலைபோட்டபிறகும் உரிய விரதத்தை அனுஷ்டிக்காமல் தண்ணி அடிப்பது சிகரெட் அடிப்பது என எதற்காக மாலைபோட்டோம் அய்யப்பன் என்றால் யார் என்று அய்யப்பனின் மகத்துவம் பற்றி அறியாமல் பேஷனுக்காக மாலை போடுபவர்கள் தான் தற்போது அதிகம்.
சில ஒயின்ஷாப்புகள் ஒருபடி மேலே போய் இங்கு சாமிகளுக்கு தனி கிளாஸ் உண்டு என‌
பத்திரிக்கைகளிலும் டிவிக்களிலும் பார்க்கும் செய்திகண்டு அதிர்ச்சியுற்றேன்.இரண்டுமாதங்கள் உங்களை கட்டுபடுத்தி உங்களால் இருக்கமுடியவில்லையென்றால் நீங்களெல்லாம் எதற்கு மாலை போட்டு இந்துக்களின் மானத்தை வாங்குகிறீர்கள்.இதற்க்கு மேல்
சில பக்தர்கள் மாலை போட்டு செல்லும் வழியில் உள்ள புகழ்பெற்ற கோவில்களுக்கெல்லாம்
செல்கின்றனர் கோவிலில் வரிசையில் நின்றும் சாமி தரிசனம் செய்வதில்லை வயதானவர்களையும் குழந்தைகளையும் இடித்து தள்ளிக்கொண்டு குறுக்கு வழியில் சென்று
சாமிதரிசனம் செய்யவேண்டும் என்று அநாகரீகமாக நடந்துகொள்கின்றனர்.எங்கே சென்று
கொண்டுள்ளது நாடு எனப்புரியவில்லை.இந்துமதத்திற்க்கு எதிரி வெளியில் இல்லை இவர்கள்
போன்ற சிலர்களால்தான் உள்ளது.ஜேசுதாஸ் ஒரு மிகச்சிறந்த பாடகர் மாற்றுமதத்தை சேர்ந்தஇவர் ஒவ்வொருவருடமும் 48நாட்கள் விரதமிருந்து மிகச்சிறந்த முறையில் அய்யப்ப பூஜை
செய்கின்றார் கோவிலுக்கு தவறாமல் வருகிறார் தெய்வீக உணர்வுடன் அவர் பாடும் பாடலை
பாருங்கள் மாலை போடும் சில போலிச்சாமிளே இவரைப்பார்த்தாவது திருந்துங்கள்.

Friday, November 4, 2011

ஹிப்னாடிசத்தில் வெளியெறிய ஆவியுடல்




மீடியமாக உள்ள ஒருவரை ஹிப்னாடிச உறக்கத்தில் ஆழ்த்தி ஆவியுலகில்
சஞ்சரிக்க வைத்து ஒரு ஆராய்ச்சி 08.04.84அன்று
கோவையில் மீடியம் திரு ரத்தினசாமி,திரு விக்கிரவாண்டி ரவிச்சந்திரன்,திரு
ஹிப்னாடிஸ்ட் டாக்டர்
ஆர்.எம்.சோமசுந்தர் ஆகியோர் பங்கேற்றனர் மீடியமாக யுவராஜ் அவர்கள் பங்கேற்றார் .

யவராஜின் ஆவியுடல் ஆவியுலகத்தில் சஞ்சரித்து நேரடியாக கொடுத்த பதில்கள்.

கேள்வி;இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்?
பதில்;அதிவேகமாக பயணம் செய்து ஒரு இடத்தை அடைந்து கொண்டு இருக்கிறேன்.
கேள்வி;அந்த இடத்தை பற்றி கூற முடியுமா
பதில்:இங்கு எல்லா இடத்திலும் ஒரே மாதிரியான ஒளியை காண்கிறேன் வெப்பம்
இல்லை குளிர்ச்சி இல்லை
துக்கம் துயரம் எதுவும் எனக்கு தெரியவில்லை இங்கு இருப்பது எனக்கு
மிகுந்த மனமகிழ்ச்சியை தருகிறது.
கேள்வி:அங்கு வேறு எதுவும் உங்களுக்கு தெரிகிறதா?
இங்கு கூட்டம் கூட்டமாக ஆவியுருவங்கள் மிதக்கின்றன சில வெண்மை நிறமுடனும்
சில சிகப்பு நிறமாகவும்
காட்சி தருகின்றன‌.
கேள்வி:அவைகளை கண்டு உங்களுக்கு அச்சம் ஏற்படுகிறதா
பதில்:அவைகளை கண்டு எனக்கு பாசம் ஏற்படுகிறது
கேள்வி:வேறு ஏதாவது கூற முடியுமா?
பதில்:சற்று பொறுங்கள் ஒரு ஆவி மட்டும் என்னை நோக்கி வருகிறது
அது என் பாட்டி என்று உணர்கிறேன் பூமியில் இருந்ததை போன்று தெரியவில்லை இளமையோடும்
புதுப்பொழிவோடும் இருக்கிறார்கள் கவலையற்று என்னிடம் பழகுகிறார்கள் என்னை
ஆசிர்வதிக்கிறார்கள்
ஹிப்னாடிசத்தில் ஆழ்த்தப்பட்டு இங்கு வந்து இருக்கிறாய் நீ அதிகநேரம்
இங்கு இருக்கமுடியாது என கூறுகிறார்கள்
இங்கு பூமியை போன்ற சூழ்நிலை இங்கு இல்லை சூரியன் இல்லாதாதால் வெப்பம்
இல்லை நிலவு இல்லாதால்
குளிர் இல்லை மனம் பரவசமாக சாந்தி அளிப்பதாக உள்ளது இந்த நிலையில்
தொடர்ந்து இருந்திட மனம்
விரும்புகிறது.
கேள்வி;சுற்று சூழ்நிலையில் வேறு எதுவும் தெரிகிறதா?
இருள் சூழ்ந்த இடம் ஒன்று தெரிகிறது அங்கு செல்ல உனக்கு இப்போது அனுமதி
இல்லை என கூறுகின்றனர்
இப்போது என் அருகில் சில வெண்மை நிறம் கொண்ட ஆவிகள் வருகின்றன.அவை
பூமியில் இருந்த போது
நான் பார்த்து பழக்கப்பட்ட உருவங்களாக‌ தெரிகின்றன.
கேள்வி:கடவுளை பற்றி ஏதாவது அறிந்து கொள்ள முடிகிறதா?
அது அருள் ஒளி அன்பு ஒளி,பேரொளி நீ இப்போது காண முடியாது அதற்க்கு நேரம்
வரவேண்டும்.என்கின்றனர்
எனது வேலை முடிந்துவிட்டதால் நான் பூமிக்கு திரும்பிகொண்டிருக்கிறேன்
மதியம்2மணி 10நிமிடங்களுக்கு ஆவியுலகம் சென்ற மீடியம் யுவராஜ்
உடல்2மணி40நிமிடங்களுக்கு தன் உடல்
அடையபெற்று சுய உணர்வு பெற்றார்.

நன்றி:நர்மதா பதிப்பகம் திரு ரத்தினசாமி எழுதிய ஆவிகளுடன் நாங்கள்

Thursday, November 3, 2011

சகாதேவர் அருளிய தேவதா தொடுகுறி சக்கரம்


http://www.tamilheritage.org/uk/bl_thf/tmilpage.html

இந்த லிங்கிற்க்கு சென்று தொடுகுறிசக்கரத்தை மனதில் இறைவனை நினைத்து
கண்ணை மூடிக்கொண்டு ஒரு காரியத்தை மனதில் நினைத்துக்கொண்டு ஏதாவது ஒரு
பிடித்த கட்டத்தை
நினைத்துக்கொண்டு தொடுங்கள்.ஒரு சிறிய பாக்ஸ் ஒன்று திறக்கும் அதில் ஒற்றை எழுத்து ஒன்று வரும் அதை கிளிக் செய்யுங்கள்
நீங்கள் நினைத்த காரியம் பற்றி சித்தர் பாடல்
போல் ஒரு பாடல்
வரும் அது ஓரளவிற்க்கு அனைவருக்கும் புரியும்.இதற்கு இன்டெர்னெட் எக்ஸ்ப்ளோரர் உலவி
பயன்படுத்த வேண்டும் மற்ற உலவிகளை பயன்படுத்தினால் சைனீஸ் எழுத்துக்கள் போல‌
தெரியும்
குறிப்பு ;  ஒரு நாளைக்கு           காலையில் குளித்து முடித்து விட்டு ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே பார்க்கவும் அடிக்கடி பார்த்தால் பலன்கள் சரியாக இருக்காது   

சகாதேவர் அருளிய தேவதா தொடுகுறி சக்கரம்


http://www.tamilheritage.org/uk/bl_thf/tmilpage.html

இந்த லிங்கிற்க்கு சென்று தொடுகுறிசக்கரத்தை மனதில் இறைவனை நினைத்து
கண்ணை மூடிக்கொண்டு ஒரு காரியத்தை மனதில் நினைத்துக்கொண்டு ஏதாவது ஒரு
பிடித்த கட்டத்தை
நினைத்துக்கொண்டு தொடுங்கள்.பயன்படுத்தி பார்க்கவும்ஒரு சிறிய பாக்ஸ் ஒன்று திறக்கும் அதில் ஒற்றை எழுத்து ஒன்று வரும் அதை கிளிக் செய்யுங்கள்
நீங்கள் நினைத்த காரியம் பற்றி சித்தர் பாடல்
போல் ஒரு பாடல்
வரும் அது ஓரளவிற்க்கு அனைவருக்கும் புரியும்.இதற்கு இன்டெர்னெட் எக்ஸ்ப்ளோரர் உலவி
பயன்படுத்த வேண்டும் மற்ற உலவிகளை பயன்படுத்தினால் சைனீஸ் எழுத்துக்கள் போல‌
தெரியும்
குறிப்பு ;  ஒரு நாளைக்கு           காலையில் குளித்து முடித்து விட்டு ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே பார்க்கவும் அடிக்கடி பார்த்தால் பலன்கள் சரியாக இருக்காது   

பழனியில் போகரின் ஆவி



எத்தனையோ சித்தர் பெருமக்களையும் மகான்களையும் திருவண்ணாமலை,சதுரகிரி,பழனி
போன்ற இடங்கள் நமக்கு கொடுத்துள்ளன.அவற்றில் பழனி இன்றும் எத்தனையோ சித்தர்கள்
வாழ்ந்து வருவதாக நம்பப்படுவதுண்டு.18சித்தர்களில் ஒருவரும் பழனி முருகன் சிலையை செய்த போகரின் ஆவி ஒரு பெண்ணின் உடலில் இருப்பதாக நம்பப்படுகிறது கீழ்வரும் காணொளியை பார்த்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்

Wednesday, November 2, 2011

சிவன்மலை

தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோவில்களில் இந்த கோவில் சற்று வித்தியாசமானது.கரூரிலிருந்து திருப்பூர் செல்லும் வழியில் காங்கேயத்தில் இறங்கி அங்கிருந்து
 5கிமீ இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்.இந்த கோவிலில் உள்ள முருகன் உலகத்தில் எந்த மூலையில் உள்ள முருகபக்தருக்கும் திடீரென காட்சி தருபவர்.இவர் திடீரென ஒரு பக்தர் கனவில் தோன்றி ஏதாவது ஒரு பொருளை காண்பித்து அதை வைத்து பூஜை செய்ய சொல்வார்
உதாரணமாக தண்ணீரை வைத்து பூஜை செய்ய சொன்னால் தண்ணீரினால் ஏதாவது பிரச்சினை
சுனாமி,தண்ணீர் பஞ்சம் முதலியவை வரலாம் அதன் தீவிரத்தை குறைக்கவே முருகப்பெருமான் பக்தர்கள் கனவில் சென்று கட்டளையிடுகிறார் பக்தர்கள் சொல்வதை கோவில் நிர்வாகம் உடனே கேட்பதில்லை அவர் சொல்வது உண்மையா என பூ போட்டு பார்த்து
சாதகமான பதில் வந்தால்தான் அவர் சொல்லும் பொருளை பூஜை செய்ய ஒத்துக்கொள்கிறது.


தாருகாசுரனின் புதல்வர்கள் விமாலாட்சன், வித்யுன்மாலி, தாரகாட்சன். இவர்கள் கடும் தவம் செய்து ஈசன் அருளால் பொன், வெள்ளி, இரும்பு என உலோகங்களால் மிக பெரிய கோட்டைகளை கட்டினார்கள். இந்த கோட்டை எந்த நேரத்திலும் எந்த இடங்களில் வேண்டுமானாலும் விமானம் போல பறக்கும் சக்தி வாய்ந்தது. கோட்டை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நகரும் போதும் அசுர புதல்வர்களாலும் பூலோக மக்களுக்கு மிக பெரிய பாதிப்புகள் ஏற்பட்டது. இதனால் சிவபெருமானிடம் முனிவர்களும் பக்தர்களும் முறையிட்டார்கள். அசுரர்களின் உலோகத்தலான கோட்டைகளை அழிக்க சிவபெருமான் பிரமாண்ட தேர் உருவாக்கி மேருமலையை வில்லாகவும் வாசுகி என்ற பாம்பை நாணாகவும் கொண்டு போரிடும்போது வில்லாக இருந்து மேருமலையின் ஒரு பாகம் பூமியில் விழுந்தது. அதுவே சிவன்மலை என்று அழைக்கப்படுகிறது.

அகத்திய முனிவரால் இந்த பகுதிக்கு வந்த முருகன்

அகத்திய முனிவர், மெய்யான சன்மார்க்க நெறியை உபதேசிக்கும்படி முருக பெருமானிடம் வேண்டினார். அகத்தியரை சிவன்மலைக்கு அழைத்து சென்று இங்கு இருந்த அத்திமரத்தின் கீழ் உபதேசம் செய்து அந்த இடத்திலேயெ நிரந்தரமாக அமர்ந்தார் முருகப் பெருமான். 

நோய்க்கு மருந்து முருகனே என்றார் கௌதம மகரிஷி

முசுகுந்தன் என்ற அரசன் தீராத நோயால் அவதிப்பட்டார். இதற்கு பல மருந்துகள் உட்கொண்டும் பலன் கிடைக்கவில்லை. அதனால் கௌதமகரிஷி முனிவரிடம் சென்ற முசுகுந்தன், தன் உடல் உபாதையை தீர்க்கும்படி வேண்டினார். “சிவன்மலை முருகனை வணங்கினால் உன் வியாதி நீங்கும்.” என்றார் கௌதமகரிஷி. முனிவர் கூறியது போல் முசுகுந்தன் சிவன்மலை முருகனை தரிசித்து பின் முசுகுந்தனை வதைத்த நோய் விலகியது.

1717-ம் ஆண்டு முதல் முருகனின் மகிமையை அறிந்தார்கள்.

சிவன்மலை கிராமத்தில் முருகன் கோயில் இருப்பதை கேள்விப்பட்ட காங்கேய நாட்டு அரசர், காடையூர் காங்கேய மன்றாடியார், காங்கேயம் பல்லவநாயர் போன்ற தனவந்தர்கள் சிவன்மலை முருகனின் பக்தர்களாக இருந்ததால் முருகனுக்காக திருக்கோயிலுக்கு பல நன்கொடைகளை கொடுத்து திருப்பணிகளை நடத்தினார்கள். 1717-ம் ஆண்டு சர்க்கரை மன்றாடியார் வம்சத்தை சேர்ந்த ஒருவருக்கு சில பிரச்சனைகள் ஏற்பட்டது. இதனால் மனஉளைச்சல் அடைந்தார். அந்த இன்னல்களில் இருந்து தன்னை விடுவித்தால் சிவன்மலையில் தேர் வருவதற்கு பாதை அமைத்து தருவதாக வேண்டினார். பக்தர்களை காண விரும்பிய முருகன் அந்த பக்தனின் நியாயமான பிராத்தனைக்கு செவி சாய்த்தார். அவர் கஷ்டங்கள் தீர்ந்தது. வேண்டிய படி முருகனின் தேர் வீதி உலா வர சிவன்மலையில் பாதை அமைத்தார் அந்த பக்தர்.

வெண்குஷ்டத்தை போக்கிய முருகன்

வள்ளியாத்தாள் என்ற பெண்ணின் மகன் விசுவநாதன் வெண்குஷ்ட நோயால் அவதிப்பட்டான். இதற்கு நிறைய வைத்தியம் பார்த்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை. திக்கற்றவனுக்கு தெய்வம்தான் துணை என்பதால் வள்ளியாத்தாள், சிவன்மலை முருகனை பற்றி அறிந்து தன் மகனை அழைத்து கொண்டு திருக்கோயிலுக்கு சென்று முருகனை வணங்கி அர்ச்சனை செய்தாள். இதன் பலனாக சில மாதங்களிலேயே தெரிந்தது. ஆம்… விசுவநாதனின் வெண்குஷ்டம் நோய் நீங்கியது. இதனால் மகிழ்ந்து,

“ஐயா சிவமலைவாழ் ஆண்டவனே பன்னிரண்டு

கையாஎன் சேய்விசுவின் காலதனில்-மெய்யாக

வந்த வெண்குட்டமதை மாற்றிக் கருணையது

தந்தவனே நின் தாள் சரண்”

இப்படி பாடல் மூலமாக சிவன்மலை முருகனை போற்றினாள் வள்ளியாத்தாள். சிவன்மலை குமரப்பெருமானை வணங்கினால் தீராத வியாதிகளை தீர்ப்பான் சிவகுமரன்.

நானும் சதுரகிரியும் ஊதுபத்தியும்

சுமார் 3வருடங்களுக்கு முன் நான் சில மனத்துயரங்களில் ஆழ்ந்திருந்தபோது சக்தி விகடனில்
தொடராக வந்து பின்பு புத்தகமாக வந்த விகடன் பிரசுரத்தின் சதுரகிரி யாத்திரை என்ற புத்தகத்தை இராமநாதபுரத்தில் உள்ள ஒரு புத்தகக்கடையில் வாங்கினேன்சதுரகிரி யாத்திரை - புத்தகம் -(E-Book - with download option) http://www.ziddu.com/download/15343557/Sathuragiri.pdf.html
 திரு சீனிவாசன்
அவர்கள் எழுதிய புத்தகம் அது. ஏற்கனவே அந்த மலையின் அமானுஷ்யங்களும் 18 சித்தர்களும்
அங்கே அரூபமாக வாழ்கிறார்கள் என்ற தகவல்களையும் சிலர் சொல்லி ஓரளவுக்கு கேள்விப்பட்டு இருக்கிறேன்.எனக்கு அரைகுறையாக தெரிந்த தகவல்களை இந்த புத்தகம் முழுதாக விளக்கியது.அந்த புத்தகம் படித்தவுடன் சதுரகிரி சென்றே ஆக வேண்டும் என்று முழு
மூச்சாக இறங்கினேன்.எங்கள் வீட்டில் இதை சொன்னபோது என்னை சிறுவயதில் இருந்து வெளியிடங்களுக்கு செல்லாமலும் தனிமையிலும் வளர்த்துவிட்டார்கள் அதனால் எனக்கு
வயதானாலும் வீட்டில் அனுமதி வாங்காமல் செல்ல முடியவில்லை.சாதாரண கோவில் என்றால் ஒத்துக்கொள்வார்கள் அது மலைக்கோவில் கடினமான பாதை என்றுசிலர் என் வீட்டரை பயம் காட்டி வைத்துஇருந்ததாலும் என் வீட்டில் மிகவும் பயந்தார்கள் அதனால் எனக்கு
ஒவ்வொரு முறை கேட்கும்பொழுதும் வேறு சிவன் கோவிலுக்கு சென்று வா அங்கு வேண்டாம்
அங்கு நமது ஊரில் இருப்பவர்களில் யாராவது இருந்தால் அவரின் துணையோடு சென்று வா அதுவரை அங்கு செல்லவேண்டாம் என்று தீர்மானமாக சொல்லிவிட்டனர்.நான் எப்படியும் அந்த‌
மலையையும் சுந்தரமகாலிங்கத்தையும் பார்த்துவிடவேண்டும் என்று வெறியில் இருந்தேன்
ஒருநாள் எங்களது வீட்டில் குடியிருக்கும் ஒருவர் அவர் பெயர் தவமணி.அவரின் வீட்டில் நான்
பேசிக்கொண்டு இருந்தபொழுது சதுரகிரி மலை பற்றி ஒரு டி.வி.டி இருந்தது இது உங்களுக்கு
எப்படி வந்தது என நான் கேட்டபோது நம்மூரில்தான் ஒருவர் வனக்காவலராக சதுரகிரி மலையில் வேலை செய்கிறாரே அவர் கொடுத்தார் என சொன்னார் .அவர் யார் என விசாரித்து
அவர் மூலமாக சதுரகிரி மலைக்கு செல்வது என முடிவு செய்யப்பட்டது.வீட்டிலும் சதுரகிரி
மலையிலே வேலை செய்பவர் சொந்த ஊரில் இருந்ததாலும் எங்கள் வீட்டில் குடியிருப்பவர்
அவர் நண்பர் என்பதாலும் நான் சொல்லும் தவமணி என்பவர் என்னோடு வருகிறேன் என சொன்னதாலும் என் வீட்டில் ஒரு வழியாக அனுமதிகொடுத்தனர்.இறைவன் சதுரகிரிக்கு நான்
வரும் எண்ணத்திலே இருப்பதை அறிந்துகொண்டு எப்படி கனெக்சன் கொடுக்கிறார் பாருங்கள்
நான் கனவிலும் நம்மூரை சேர்ந்தவர் சதுரகிரி மலையிலே வனப்பாதுகாவலராக இருப்பார்
என நினைத்துப்பார்க்கவில்லை.இறைவனின் திருவிளையாடல் அது.ஒரு வழியாக கடினமான‌
செங்குத்தான மலைப்பாதைகளில் ஏறி சதுரகிரி மலையில் பயணம் செய்தோம்.வழியில் ஒரு அதிசயநாவல் ஊற்று உள்ளது.அந்த தண்ணீரை பருகினால் சர்க்கரை நோய் குணமாகி விடும்
என்று கூறப்படுகிறது தண்ணீரின் சுவையோ அலாதியாக இருந்தது.ஒரு வழியாக மலை உச்சியை அடைய 3மணிநேரம் ஆனது மாலை 6 மணிக்கு நாங்கள் சென்றபோது இரவு பூஜை

சாமிக்கு நடந்துகொண்டிருந்தது நான்,வனக்காவலர்.தவமணிமாமா,என் இளையசகோதரன்
நண்பர் சண்முகம்,பூமிநாதன் ஆகியோர் சென்றுஇருந்தோம்.மலையில் நடந்து சென்ற களைப்பு இருந்ததாலும் நாங்கள் சென்ற போது பூஜை முடிந்து விட்டதாலும் காலையில்
சாமிகும்பிடலாம் என்று அங்கு இருந்த கஞ்சிமடத்தில் படுத்துவிட்டோம்.கஞ்சி மடம் என்பது
காளிமுத்து சுவாமிகள் என்பவரால் தொடங்கப்பட்டு எந்த நேரம் சதுரகிரி யார் சென்றாலும்
அவர்களுக்கு சுடசுட அன்னம் போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் எந்தவித உணவகங்கள் கடைகளோ இல்லாத மலையாதலால் அங்கு வரும் பயணிகளுக்கு இது ஒரு
வரப்பிரசாதம் இந்த திட்டத்தை ஆரம்பித்த மகான் காளிமுத்து சுவாமிகள் போற்றுதலுக்குரியவர்.

காலையில் எழுந்தோம் குளித்தோம் சுந்தரமகாலிங்கத்தையும்,சந்தன மகாலிங்கத்தையும்
தரிசித்தோம்.சுந்தரமகாலிங்கம் சன்னதியில் இருந்த ஆன்மிகமும் அமைதியும் அங்கு இருந்த ஊதுபத்தியின் வாசனையும்
என்னை ஏதோ செய்தது. மலை இறங்க ஆரம்பித்தோம் இறங்கும் வழியில் கோரக்கசித்தர் பாறையில்
அமர்ந்து அவரையும் தரிசித்துவிட்டு அரூபமாக அந்த மலையில் வாழும் அனைத்து மகான்களையும் நினைத்துக்கொண்டு கீழே இறங்கினோம் இங்கு சித்தர்கள் நாய் ரூபத்தில்
இருப்பதாகவும் இங்கு வரும் பயணிகளுக்கு பின்னால் ஏதாவது ஒரு நாய் கூடவே வருவது
அதிகம் பேருக்கு நடக்கும் விஷயம்.ஒரு வழியாக கீழே இறங்கினோம் மாருதி ஓம்னி வண்டியில் ஏறியவுடன் பழைய கதைகள்,குடும்ப,சினிமாகதைகள் என்று பேசிக்கொண்டே
சென்றோம் அருப்புக்கோட்டை தாண்டி ஒரு காட்டுப்பாதையில் வண்டி சென்றுகொண்டிருந்தது சுற்றிலும் வயற்காடு திடீரென்று காலையில் சுந்தரமகாலிங்கம்
சன்னதியில் சாமி தரிசனம்செய்தது நினைவுக்கு வந்தது நினைவு வந்ததுதான் தாமதம் குப் குப் என்று காலையில் என்ன ஊதுபத்தியின் வாசனையில் மனதை தொலைத்தேனோ அதே
ஊதுபத்தியின் மணம் சுற்றிலும் வீடோ கடையோ மனிதர்களோ எதுவும் கிடையாது அப்புறம்
எப்படி இந்த மணம் நமக்கு வருகிறது என்று புரியவில்லை பக்கத்தில் இருந்த மாமா,நண்பர்கள்
என அனைவரிடமும் கேட்டேன் எங்களுக்கு எந்த மணமும் வரவில்லை எனசொல்லி விட்டனர் ஒரு 5 நிமிடம் தொடர்ந்து அடித்த அந்த மணம் அப்புறம் மறைந்து விட்டது
இந்த அமானுஷ்ய சம்பவத்தை என்னால் மறக்கவே முடியவில்லை ஏற்கனவே நான் படித்த‌
புத்தகத்தில் சுந்தரமகாலிங்கம்,சந்தனமகாலிங்கம்,18சித்தர்கள் சதுரகிரி சென்று வந்தவர்களின்
வாழ்க்கையில் நடத்திய திருவிளையாடல்களை நான் படித்திருக்கிறேன் ஊருக்கு வந்தவுடன்
முதல் வேளையாக அது என்ன பத்தி என்பதை கண்டறிந்து  அது சுகந்த சுவர்ணா என்ற அகர்பத்தி என்பதை கண்டறிந்து அதைத்தான் வீடு அலுவலகம் போன்றவற்றிற்க்கு பயன் படுத்திவருகிறேன் அவ்வளவு ஒரு ஆன்மிகமணம் அந்தப்பத்தியில் இருப்பதை மறுக்கமுடியாது இறைவன் நடத்திய அந்த பத்தி விளையாட்டையும் மறுக்கமுடியாது
இதை படிப்பதால் என்னை பைத்தியக்காரன் உளருகிறான்,பத்திக்கு விளம்பரம் கொடுக்கிறான்
என தவறாக நினைக்காதீர்கள் நான் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை.மற்றுமொருமுறை
நான் சதுகிரி சென்று வந்ததை பற்றி அடுத்து ஒரு பதிவில் எழுதுகிறேன்

Thursday, October 20, 2011

சதாசிவ பிரம்மேந்திரர்

சதாசிவ பிரம்மேந்திரர் என்ற மகானை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள்
என்று நினைக்கிறேன்
இவரை பற்றி அறிந்திராத நான் இரண்டு வருடங்களுக்கு முன் திரு வித்யாதரன் அவர்கள்
குங்குமம் இதழில் எழுதிய எந்த நட்சத்திரக்காரர்கள் யாரை வணங்க வேண்டும்
என்ற கட்டுரையில் எனது நட்சத்திரமான கேட்டை நட்சத்திரம் பற்றி பார்த்தேன்
கரூரில் இருந்து 10கிமீ தூரத்தில்
இருக்கும் நெருரில் சதாசிவ பிரம்மேந்திரரின் ஜீவசமாதி யில் வணங்கினால்
துன்பங்கள்,மனக்கவலைகள்
அனைத்தும் பகலவனை கண்ட பனி போல மறையும் எனக்குறிப்பிட்டு இருந்தார்



காலப்போக்கில் இங்கு செல்வோம் என்று நினைத்தேனே தவிர இது வரை அங்கு செல்லவில்லை
அந்த கட்டுரையையும் மறந்துவிட்டேன் சுமார் 6மாதத்திற்க்கு முன் ஒரு
கடுமையான பிரச்சினை
எதிர்க்கொள்ளவேண்டி இருந்தது ராமநாதபுரத்திலிருந்து மதுரை செல்லும் பேருந்தில் ஏறி
உட்கார்ந்து சதாசிவ பிரம்மேந்திரையும் சதுரகிரி சுந்தரமகாலிங்கத்தையும்
நினைத்துக்கொண்டே பேருந்தில் சென்றேன்.மதுரை சென்று இறங்கியவுடன் நான்
என்ன நினைத்து பயந்து பயந்து மதுரை சென்றேனோ அந்த பிரச்சினை பகலவனை கண்ட
பனி போல‌
நான் எதிர்பார்க்காத வகையில் தீர்ந்தது



இவரை வணங்கினால்
அடுத்த ஒரு மணி நேரத்தில் எதை நினைத்து நாம் சஞ்சலப்படுகிறோமோ அதை உடனே தீர்த்து
வைக்கிறார் நாம் இவரை வேண்டி அடுத்த ஒரு மணி நேரத்திலோ இரண்டு மணி நேரத்திலோ
நம் பிரச்சினை தீர்ந்துவிடுகிறது.நாம் தொடர்ந்து வேண்ட வேண்டும் என்பது முக்கியம்
இவரை பற்றி விகடன் பதிப்பகம் வெளியிட்டு உள்ள
புத்தகத்தில் படித்து தெரிந்து கொள்ளலாம்
மேலும் இணையத்தில் இவரது பெயரை தமிழில் தட்டச்சு செய்து தேடினால்
ஏகப்பட்ட கட்டுரைகள் படிக்கலாம்.
குறிப்பு;குறிப்பாக விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
மன நிம்மதி இல்லாமல்
தவிப்போர் இவரை வணங்கினால் உடனடி பலன் அடையலாம் என்பது எனது கருத்து

ஒரு கட்டுரையின் லிங்க் கீழே
http://jaghamani.blogspot.com/2011/05/blog-post_1007.html

Wednesday, July 27, 2011

ஆடி அமாவாசை



எதிர்வரும் 30.8.2011 சனிக்கிழமை அன்று ஆடி அமாவாசை வருகிறது பிதுர் தோஷம் பிதுர்சாபம் முன்னோர்களுக்கு
செய்யவேண்டிய கர்மகாரியங்களை சரியாகசெய்யாதோர் ராமேஸ்வரம்,சதுரகிரி,சேதுக்கரை,போன்ற இடங்களில்
சென்று செய்துகொள்ளலாம் ஏன் என்றால் முன்னோர்களின் ஆசிதான் நம்மையும் நம் குடும்பத்தையும் நன்றாக‌
வாழவைக்கும்.

இருப்பிடம் ராமேஸ்வரம்;மதுரை மாட்டுதாவணி பஸ் நிலையத்திலிருந்து 160 கிமீ தூரம் 5 நிமிடத்திற்க்கு ஒரு பஸ்ஹ்
உண்டு

சேதுக்கரை;மதுரையில் இருந்து ராமேஸ்வரம் பேருந்தில் ஏறி ராமநாதபுரத்தில் இறங்கி அங்கு இருந்து
திருப்புல்லாணி செல்லும் பேருந்தில் செல்லவேண்டும்

சதுரகிரி;மதுரையிலிருந்து ராஜபாளையம் பேருந்தில் ஏறி அங்கிருந்து கிருஷ்ணன்கோவில் நிறுத்தத்தில் இறங்கி
அங்கிருந்து வத்திராயிருப்பு சென்று அங்கு இருந்து மினி பஸ் ஆட்டோ போன்றவற்றில் தாணிப்பாறை அடைந்து
அங்கு இருந்து 7கிமீ மலைப்பாதையில் நடந்து செல்லவேண்டும்

Wednesday, July 20, 2011

திருப்புல்லாணி ஆதி ஜெகன்னாதபெருமாள் கோவில்

என்னதான் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அள்ளி கொஞ்ச ஒரு குழந்தை இல்லாமல் நிறைய‌
பேர் உள்ளனர் இவர்கள் அனைவரும் ராமநாதபுரத்திலிருந்து 8கிமீ தொலைவில் உள்ள திருப்புல்லானி ஆதிஜெகனாதபெருமாள் கோவில் சென்று இங்கு இருக்கும் பெருமாளையும்
பத்மாஸனித்தாயாரையும் வணங்கி காலையில் கோவிலில் படைக்கப்படும் பிரசாதமான‌
பாயாசமும் சாப்பிட்டு விட்டு சென்றால் அந்த பெருமாளின் கருணையினால் கண்டிப்பாக‌
குழந்தை பிறப்பதற்கு வாய்ப்பு உள்ளது.எத்தனையோ டாக்டர்களிடம் காண்பித்து சரியாகதவர்கள் இங்கு வந்து வணங்கி செல்லலாம்

Tuesday, July 19, 2011

கொளஞ்சியப்பர் திருக்கோவில்

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திலிருந்து அருகில் உள்ளது மணவாளநல்லூர் இங்கு  கொளஞ்சியப்பர்
கோவில் உள்ளது கோவிலைச்சுற்றி மூன்று முனிஸ்வரர் காவல் காக்கின்றனர் இவர்கள்தான் மணவாளமா
முனிகள் என அழைக்கப்படுகின்றன இங்கு கொளஞ்சிமரங்கள் முன்பு அதிக அளவில் இருந்ததால் இந்த பெயரில்
அழைக்கப்படுகிறது.இங்கு முருகன் அமர்ந்து அருள்பாலிக்கிறார் எந்த குறை என்றாலும் இங்கு உள்ள கோவிலில்
முருகன் சன்னதியில் ப்ராது கொடுக்கும் முறை இன்றளவும் பிரசித்தம் ப்ராது கொடுப்பவர்களின் பிரச்சினைகளை
உடனுக்குடன் தீர்த்து வைக்கிறார் முருகன் ஒரு பேப்பரில் நம் குறைகளை எழுதி முருகனுக்கு பூஜை செய்து நாம்
எழுதிய ப்ராதை கோவிலில் கட்டி தொங்கவிட்டு வந்தால் வீடு வருவதற்க்கு முன்பு கூட நம் பிரச்சினையை
முருகன் தீர்த்து வைக்கிறார்

Thursday, July 14, 2011

கோட்டைபிடாரி அம்மன் மருதாந்தை கிராமம்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இருந்து ஓரியூர் செல்லும் ரோட்டில் மருதாந்தை கிராமம் அமைந்துள்ளது
இங்கு அமர்ந்து அருள்பாளிக்கிறாள் இந்த அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் இந்த கோவிலில் பிராமணபெரியவர்
ஒருவர் (பார்ப்பதற்க்கு காஞ்சி பெரியவர் போலவே இருப்பார்)மக்களுக்கு அருள்வாக்கு சொல்கிறார் கடும் மாந்த்ரீகம்
பேய் பிசாசு போன்றவைகளுக்கு அம்பாளின் அருளால் உடனே தீர்த்து வைக்கிறார் மனதுக்கு மிகவும் அமைதியான‌
கோவில் .அந்தபெரியவர் மிகவும் அமைதியானவர் யாரிடமும் தட்சிணை வாங்கமாட்டார். வியாழக்கிழமை மட்டும்
தான் அருள்வாக்கு சொல்வார் ஒருவர் சென்றவுடனே ச்ரியாக சொல்லிவிடுவார் இவரின் பேச்சும் செயலும் காஞ்சி
பெரியவரை நினைவுபடுத்தும்
குறிப்பு வியாழன் மற்றும் வெள்ளி மட்டுமே கோவில் நடை திறக்கப்படும்

Monday, April 25, 2011

நினைத்ததை நிறைவேற்றும் யாகம்

மதுரையில் சித்தர் கருவூரார் அவர்களின் வழிவந்தவர்கள் பொதுமக்கள் என எல்லோரும் சேர்ந்து தத்தனேரி
மயானத்தில் பிரதி வியாழன் தோறும் இந்த மயானத்தில் ஒரு சிவலிங்கத்தை வைத்து உள்ளெ உள்ள ஒரு
காளி கோயிலில் சிறப்பு யாகம் நடைபெருகிறது தொடர்ந்து கலந்து கொண்டால் நம் பிரச்சினை அனைத்தும்
தீர்வதாக முழுமனதுடன் நம்புகிறார்கள் நானும் கலந்து கொண்டேன் செவ்வாடை அணிந்து இந்த பூஜையில்
கலந்து கொண்டால் நம் உடல் பரவசப்படுவது நிச்சயம்.மிகமிக அருமையான பூஜை.

கடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்துமாரியம்மன் ஆலயம்

தஞ்சை மாவட்டம் , மயிலாடு ‌ துறை வட்டம் , குத்தாலம் அருகில்   உள்ள ‌ சேண்டிருப்பு கிரமத்தில் எமுந்தருளி பேரருள் வ ‌ ழங்கும்   அருள...