Friday, November 4, 2011

ஹிப்னாடிசத்தில் வெளியெறிய ஆவியுடல்




மீடியமாக உள்ள ஒருவரை ஹிப்னாடிச உறக்கத்தில் ஆழ்த்தி ஆவியுலகில்
சஞ்சரிக்க வைத்து ஒரு ஆராய்ச்சி 08.04.84அன்று
கோவையில் மீடியம் திரு ரத்தினசாமி,திரு விக்கிரவாண்டி ரவிச்சந்திரன்,திரு
ஹிப்னாடிஸ்ட் டாக்டர்
ஆர்.எம்.சோமசுந்தர் ஆகியோர் பங்கேற்றனர் மீடியமாக யுவராஜ் அவர்கள் பங்கேற்றார் .

யவராஜின் ஆவியுடல் ஆவியுலகத்தில் சஞ்சரித்து நேரடியாக கொடுத்த பதில்கள்.

கேள்வி;இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்?
பதில்;அதிவேகமாக பயணம் செய்து ஒரு இடத்தை அடைந்து கொண்டு இருக்கிறேன்.
கேள்வி;அந்த இடத்தை பற்றி கூற முடியுமா
பதில்:இங்கு எல்லா இடத்திலும் ஒரே மாதிரியான ஒளியை காண்கிறேன் வெப்பம்
இல்லை குளிர்ச்சி இல்லை
துக்கம் துயரம் எதுவும் எனக்கு தெரியவில்லை இங்கு இருப்பது எனக்கு
மிகுந்த மனமகிழ்ச்சியை தருகிறது.
கேள்வி:அங்கு வேறு எதுவும் உங்களுக்கு தெரிகிறதா?
இங்கு கூட்டம் கூட்டமாக ஆவியுருவங்கள் மிதக்கின்றன சில வெண்மை நிறமுடனும்
சில சிகப்பு நிறமாகவும்
காட்சி தருகின்றன‌.
கேள்வி:அவைகளை கண்டு உங்களுக்கு அச்சம் ஏற்படுகிறதா
பதில்:அவைகளை கண்டு எனக்கு பாசம் ஏற்படுகிறது
கேள்வி:வேறு ஏதாவது கூற முடியுமா?
பதில்:சற்று பொறுங்கள் ஒரு ஆவி மட்டும் என்னை நோக்கி வருகிறது
அது என் பாட்டி என்று உணர்கிறேன் பூமியில் இருந்ததை போன்று தெரியவில்லை இளமையோடும்
புதுப்பொழிவோடும் இருக்கிறார்கள் கவலையற்று என்னிடம் பழகுகிறார்கள் என்னை
ஆசிர்வதிக்கிறார்கள்
ஹிப்னாடிசத்தில் ஆழ்த்தப்பட்டு இங்கு வந்து இருக்கிறாய் நீ அதிகநேரம்
இங்கு இருக்கமுடியாது என கூறுகிறார்கள்
இங்கு பூமியை போன்ற சூழ்நிலை இங்கு இல்லை சூரியன் இல்லாதாதால் வெப்பம்
இல்லை நிலவு இல்லாதால்
குளிர் இல்லை மனம் பரவசமாக சாந்தி அளிப்பதாக உள்ளது இந்த நிலையில்
தொடர்ந்து இருந்திட மனம்
விரும்புகிறது.
கேள்வி;சுற்று சூழ்நிலையில் வேறு எதுவும் தெரிகிறதா?
இருள் சூழ்ந்த இடம் ஒன்று தெரிகிறது அங்கு செல்ல உனக்கு இப்போது அனுமதி
இல்லை என கூறுகின்றனர்
இப்போது என் அருகில் சில வெண்மை நிறம் கொண்ட ஆவிகள் வருகின்றன.அவை
பூமியில் இருந்த போது
நான் பார்த்து பழக்கப்பட்ட உருவங்களாக‌ தெரிகின்றன.
கேள்வி:கடவுளை பற்றி ஏதாவது அறிந்து கொள்ள முடிகிறதா?
அது அருள் ஒளி அன்பு ஒளி,பேரொளி நீ இப்போது காண முடியாது அதற்க்கு நேரம்
வரவேண்டும்.என்கின்றனர்
எனது வேலை முடிந்துவிட்டதால் நான் பூமிக்கு திரும்பிகொண்டிருக்கிறேன்
மதியம்2மணி 10நிமிடங்களுக்கு ஆவியுலகம் சென்ற மீடியம் யுவராஜ்
உடல்2மணி40நிமிடங்களுக்கு தன் உடல்
அடையபெற்று சுய உணர்வு பெற்றார்.

நன்றி:நர்மதா பதிப்பகம் திரு ரத்தினசாமி எழுதிய ஆவிகளுடன் நாங்கள்

No comments:

Post a Comment

கடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்துமாரியம்மன் ஆலயம்

தஞ்சை மாவட்டம் , மயிலாடு ‌ துறை வட்டம் , குத்தாலம் அருகில்   உள்ள ‌ சேண்டிருப்பு கிரமத்தில் எமுந்தருளி பேரருள் வ ‌ ழங்கும்   அருள...