Thursday, March 29, 2012

வெள்ளைக்கார துரையை அதிர்ச்சியடைய வைத்த ஏரிகாத்த ராமர் கோவில்

வரும் மார்ச் 31 .2012 அன்று ராமநவமி



செ ன்னை மாநகரிலிருந்து சுமார் 85 A.e. தொலைவிலும், செங்கற்பட்டிலிருந்து 30 A.e. தூரத்திலும் உள்ள தலமே இது. பேருந்துகளாலும், ரயில் போக்குவரத்தினாலும் வசதியாகச் செல்லுமாறு அமைந்த தலம். ஆதியில் வகுளாரண்யம் என்று பெயர் பெற்ற மகிழ மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியாகத் திகழ்ந்தது. கிளியாறு என்ற ஆற்றின் கரையில் அமைந்துள்ள இது மதுராந்தகச் சோழரின் நினைவாக இப்பெயர் பெற்றதாகக் கூறுவர். மதுரமான (இனிமையான) பல புண்யதீர்த்தங்களையுடைய இடம் என்றும் பொருள் கொள்ளலாம். கல்வெட்டுக்களில் மதுராந்தக சதுர்வேதி மங்கலம் என்று குறிப்பிடப்பட்டுள்ள இவ்வூர் சோழ மன்னனால் வேதம் ஓதும் அந்தணர்களுக்கு மான்யமாக அளிக்கப்பட்டது. ப்ரஹ்மவைர்த்தம், பார்க்கவம் போன்ற புராணங்களில் இந்தத் தல மஹாத்மியம் கூறப்பட்டுள்ளது.


விபண்டக மஹர்ஷி கிளியாற்றின் கரையில் தவம் புரிந்தபோது ராமபிரான் வனவாசம் முடித்துத் திரும்பி அயோத்தி செல்லும் போது புஷ்பக விமானம் இத்தலத்தைக் கடக்க முடியாமல் நின்றது. ஸீதாபிராட்டியின் கையைப் பற்றி விமானத்திலிருந்து இறங்கி முனிவருக்கு ராமபிரான் காட்சி அளித்த இடமே இத்திருத்தலம். 5 நிலை கோபுரங்களுடன் கூடிய ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது இந்தத் தலம். ஆழ்வார்களில் பக்திசாரர் என்றழைக்கப்பட்ட திருமழிசை ஆழ்வார்முக்தி அடைந்த தலம் இதுவே. சுகர் என்ற மஹர்ஷியும் தவம் செய்த இடம் இதே மதுராந்தகம் தான்.

ஆசார்யர்களோடும் தொடர்பு பெற்று விளங்குகிறது இந்தத் தலம். வைணவ சித்தாந்தத்தின் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டிய ஸ்ரீ ராமானுஜருக்கு வைஷ்ணவ தீ¬க்ஷயாகிய பஞ்ச ஸம்ஸ்காரங்கள் செய்யப்பட்டது இத்தலத்தில் உள்ள மகிழ மரத்தடியில் தான். மகிழ மரமே இந்தத் தல வ்ருக்ஷம். இதற்கு அதனால் த்வயம் விளைந்த பூமி என்ற பெயரும் உண்டு. 1967-ம்ஆண்டில் இக்கோவிலில் திருப்பணிகள் நடந்தபோது ஒரு சுரங்கத்தில் நவநீதக் கண்ணமூர்த்தியும், பஞ்சபாத்திரங்களும் சங்கு சக்ரங்களும் கிடைத்தன. இவை ராமானுஜரின் பஞ்சஸமஸ்காரத்திற்கு அவரது ஆசாரியர் பெரிய நம்பியால் உபயோகப்படுத்தப்பட்டவையாகும் என்பதால் இன்றும் அவை ராமானுஜரின் ஸந்நிதியில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த மதுராந்தகத்தில் உள்ள பெரிய ஏரியானது மழைக் காலங்களில் உடைத்துக்கொண்டு பெருத்த சேதத்தை விளைவித்துவந்தது. கிழக்கு இந்தியக் கம்பெனி கலெக்டராக இருந்த லயனல் பிளேஸ் பலமுறை கரையைச் சீர்படுத்தியும் பலனில்லை. எனவே 1825-ம் ஆண்டில் அவர் இம்முறை மழைகாலத்தில் ஏரி உடையாமல் இக்கோவிலில் உறையும் ராமர் காப்பாற்றினால் ஜனகவல்லித் தாயார் என்ற தாயாரின் ஸந்நிதையைக் கம்பெனி செலவிலேயே கட்டித் தருவதாக வாக்களித்தார்.

பெருமழை பெய்து ஏரி நிரம்பி வழிந்தபோது இரவில் ராமரும் லக்ஷ்மணரும் நடந்து சென்று அதனை உடையாமல் பாதுகாப்பதைக் கண்டு பரவசமடைந்த அந்த துரை ஜனகவல்லித் தாயார் ஸந்நிதியைக் கட்டிக் கொடுத்தார். இன்றும் தாயார் ஸந்நிதியில் கலெக்டரின் இந்தத் தர்மம் பற்றிய தகவல் பொறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இதனால் இந்த தலத்து ராமபிரானை ஏரி காத்த ராமர் என்றே அழைக்க ஆரம்பித்தனர்.

கோவிலில் நின்றதிருக்கோலத்தில் மூலவராகக் கோதண்டராமர் கல்யாண கோலத்தில் ஸீதை, லக்ஷ்மணருடன் காட்சி தருகிறார். உற்சவ மூர்த்தியான கோதண்ட ராமர் சற்றுப் பெரிய வடிவினராக ஸீதை லக்ஷ்மணருடன் ஸேவை ஸாதிக்கிறார். மூலவர் விபாண்டக மஹர்ஷிக்கு ஸேவை தந்த கோலத்தில் பாணிக்கிரகண பாணியில் ஸீதையின் கையைப் பற்றிக் கொண்டுள்ளார். விபாண்டக மஹர்ஷியும் ஸந்நிதியில் எழுந்தருளியுள்ளார். சற்றே சிறய அளவில் உள்ள மற்றொரு உற்சவமூர்த்தியே கருணாகரப் பெருமாள். அவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி உள்ளார். இவரையே ராமபிரானாக விபாண்டக மஹர்ஷி ஆராதித்துத் தனக்குக் காட்சி அளிக்கும்படி வேண்டினாராம். கருணாகரப் பெருமாளின் நாச்சியாரே ஜனகவல்லித் தாயார். இவர் தனி ஸந்நிதியில் மூலவராகவும், உற்சவராகவும் உள்ளார். இவரது ஸந்நிதிதான் கலெக்டர் துரையால் கட்டிக் கொடுக்கப்பட்டது. எல்லா உற்சவங்களும் கருணாகரப் பெருமாளுக்கே. ஸ்ரீ ராமநவமி மஹோத்சவம் மட்டும் கோதண்ட ராமருக்கு. உற்சவ மூர்த்தி கண்ணன இவர் ஸந்நிதியில் உள்ளார்.

மற்றும் பிற ஸந்நிதிகளில் ஆண்டாள், விஷ்வக்ஸேனர், ராமானுஜர், பெரியநம்பிகள், நிகமாந்த மஹாதேசிகன், மணவாள மாமுனிகள் உளளனர். ஆஞ்சனேயர் ராமபிரான் கோவிலுக்கு எதிரில் தனி ஸந்நிதி கொண்டு விளங்குகிறார். லக்ஷ்மி ந்ருஸிம்ஹர், உற்சவரான ப்ரஹ்லாதவரதர் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் உள்ளார். சக்கரத்தாழ்வாரும், ந்ருஸிம்ஹரும் சேர்ந்து ஒரு ஸந்நிதியில் உள்ளனர். சக்கரத்தாழ்வாரின் உற்சவ மூர்த்தியும் அங்கேயே உள்ளது. இந்தக் கோவில் புஷ்கரிணியை ராமச்சந்திர புஷ்கரிணி என்றழைக்கின்றனர். சரித்திரப்புகழ் பெற்ற ஏரியைக் காணக்கோவில் அருகில் உள்ள பாதை வழியே படிகள் உள்ளன. ஏரிக்கும் இந்தப் படிகள் உள்ள நடைபாதைக்கும் நடுவில் வண்டிகள் செல்லும் பாதை உள்ளது. கோவிலின் கோபுரத்தில் வடகலைத் திருமண் அடையாளமும் ஸ்ரீராமா என்ற எழுத்துக்களும் பொலிவுடன் காட்சி அளிக்கின்றன. இங்கு அஹோபில மடத்தினரால் நடத்தப்படும் ஸம்ஸ்க்ருதக் கல்லூரியும், ஓரியண்டல் பள்ளியும் உள்ளன. ஆனிமாத ப்ரஹ்மோத்சவமும், பங்குனி மாதத் திருக்கல்யாண உத்சவமும், மார்கழி மாத அத்யயன உத்சவமும் இங்கு புகழ் பெற்றவை.

இது நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் சேராவிட்டாலும் மிகுந்த புகழ் பெற்றது. இங்கு தங்கியிருந்து பேறு பெற்ற திருமழிசை ஆழ்வாரின் திருச்சந்த விருத்தத்திலிருந்து பொருத்தமான ஒரு பாசுரத்தை மனதில் இருத்திவழிபடுவோம்.

குரக்கினப்படைகொரு குரைகடலின் மீதுபோய்

அரக்கர் அங்கு அரங்க, வெஞ்சரம் துரந்த ஆதிநீ

இரக்கமண் கொடுத்தவதற்கு இரக்கம் ஒன்றும் இன்றியே

பரக்கவைத்து அளந்து கொண்ட பற்பபாதன் அல்லையே

Friday, March 23, 2012

நினைத்ததை நினைத்தபடி முடித்துத்தரும் சக்திவாய்ந்த காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில்



இரண்டு நாட்களுக்கு முன் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மீனாட்சிபுரம் என்ற இடத்தில்
உள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்கு அங்கு இருக்கும் உறவினர் ஒருவர் அழைத்ததற்காக சென்று இருந்தேன்.சென்ற வருடமே இந்த கோவில் விழாவுக்கு முதன் முதலில் சென்றிருந்தேன்.அப்போது வேலையின்மையால் சிறிது நேரம் சாமி தரிசனம் செய்துவிட்டு
வந்துவிட்டேன்.இந்த வருடம் கொஞ்சம் வேலையில்லாததால் இந்தகோவிலுக்கு அதே உறவினர் அழைப்பின்பேரில் சென்றிருந்தேன்.எனக்கு தற்போது 31வயதாகிறது என்னுடைய வயதிற்க்கு இப்படி ஒரு கூட்டத்தை மதுரை சித்திரைதிருவிழாவில் கூட கண்டது கிடையாது
சித்திரைவிழாவை கூட கூட்டம் அதிகமாகத்தான் வருகிறது.பல லட்சம் பால்குடங்கள் வருகிறது
மற்ற கோவில்களில் காலையில் விழா ஆரம்பித்து இரவு 1மணிவரை சிறப்பாக நடக்கிறது
இதுபோக தொடர்ந்து கோவிலில் காப்புகட்டுதலில் ஆரம்பித்து 36 நாட்கள் ஆடல் பாடல் அம்மன் வீதியுலா அம்மனுக்கு சிறப்பு அபிசேகம் என மிகப்பிரம்மாண்டமாக நடக்கிறது.குறிப்பிட்ட பால்குடதிருவிழா மிகப்பிரம்மாண்டமாக நடக்கிறது.

இந்த அம்மனை இவ்வளவு சிறப்பாக வழிபடுவதற்க்கு முக்கியகாரணம் .மற்ற கோவில்களுக்கு
உள்ள வரலாறு போல் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த வரலாறு அல்ல.சில பல வருடங்கள்தான் ஆகிறது இக்கோவில் 1960களில்தான் உருவானது இதோ அதன் வரலாறு.

1956ம் ஆண்டில் இந்த ஊருக்கு வந்த ஒரு சிறுமி திடீரென மக்களின் குறைகளை தீர்க்க அம்மன் அருள்வாக்கு சொல்ல ஆரம்பித்தாள் இதை சில நாத்திகவாதிகள் எதிர்த்தனர்.இந்தசிறுமிக்கு சின்னம்மை நோய் ஏற்பட்டது.இருந்தாலும் அந்த சிறுமி அருள்வாக்கு சொல்வதை நிறுத்தவில்லை.திடீரென சின்னம்மை நோய் பெரியம்மை நோயாக மாறியது சிறுமி இறக்கும் தருவாயில் கூட அருள்வாக்கு சொல்வதை நிறுத்தவில்லை.சிறுமி இறக்கும் தருவாயில் அவரை கேலிசெய்த ஒரு நபர் மிகுந்த கஷ்டத்துடன் வந்தார் தீராநோயுடன் வந்த நபரிடம் சிறுமி சொன்னாள்.உன் வீட்டின் கிணற்றடியில் வடமேற்கில் ஒரு தக்காளிசெடி உள்ளது அதில் ஒரு தக்காளிபழத்தை எனக்கு கொண்டுவந்துதா என சொன்னாள்
வந்தவருக்கு ஒன்றும் புரியவில்லை.என் வீட்டில் தக்காளி செடியே இல்லையே என்று சொன்னார்.நான் சொன்ன இடத்தில் சென்றுபார் இருக்கும் என்றாள்.உடனே அந்த நபர் வீட்டுக்கு விரைந்து சென்றுபார்த்தபோது கண்ணுக்கே தெரியாத அளவிற்க்கு சிறு தக்காளி செடி முளைத்திருந்தது அதில் ஒரே ஒரு தக்காளிபழம் இருந்தது.அந்த நபருக்கு ஒரே ஆச்சரியம் பழத்தை எடுத்துகொண்டு சிறுமியிடம் சென்று கொடுத்தார்.அந்த நபருக்கு ஓரிரு நாட்களில் அவருக்கு இருந்த நோய் முற்றிலும் குணமானது.அந்த சிறுமிக்கு பெரியம்மை முற்றியது இறக்கும் தருவாயில் ஊர் மக்களை அழைத்த சிறுமி நான் மறைந்த பிறகு இந்த இடத்தில் அம்மனுக்கு ஒரு புது ஆலயம் எழுப்புங்கள் உங்களது அனைத்து பிரச்னைகளில் இருந்தும் நான் உங்களை காப்பேன் என்றாள் அதன் படியே கோவில் எழுப்பபட்டது.இந்த ஊரில் மிக சக்திவாய்ந்த அம்மனாக இவளிருக்கிறாள்.வருடத்தின் பல நாட்கள் இந்த அம்மனுக்கு குளிர்ச்சி சார்ந்த அபிசேகங்களே நடைபெறுவதால் இந்த அம்மனுக்கு சீதளா தேவி என்ற பெயரும் உண்டு
இந்த அம்மனை பற்றி நான் சொல்வதை விட நீங்களே வந்து இந்த அம்மனின் சக்தியை நேரில் உணர்ந்தால் நன்றாக இருக்கும் .நம்பிகையுடன் வழிபடுபவர்களுக்கு நல்ல வழியை நிச்சயம் ஏற்படுத்திகொடுக்கிறாள் என்பதை இங்கு வரும் கட்டுக்கடங்காத கூட்டத்தை வைத்தே உணரமுடியும் என்பது நிச்சயமான உண்மை.

Saturday, March 17, 2012

நவக்கிரக கோவில்கள் ஒரு பார்வை

திங்களூர்

சந்திரனுக்கு உரிய ஸ்தலம் இது.இது தஞ்சாவூருக்கு மிக அருகில் உள்ளது சந்திரன் மனோகாரகன் எப்போதும் குழப்பநிலையில் வைத்திருப்பவன் ஜாதகத்தில் சந்திரன் வீக்காக இருப்போர் இங்கு சென்று வழிபாடு செய்யலாம்.

நாம் வாழும் வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்பங்கள் அனைத்திற்க்கும் காரணம் நவக்கிரகங்கள்தான் நவக்கிரகவழிபாட்டை சரியாகசெய்தால்தான் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளை உடைக்கமுடியும் சிலர் இதுபோன்ற விஷயங்களுக்கு எதிராக நாத்திகம் பேசுவர்
அவர்களையெல்லாம் விட்டுத்தள்ளிவிடுங்கள்.தமிழ்நாட்டில் நாத்திகம் பேசும் ஒரு முன்னணித்தலைவர் ஒருவர் கூட மஞ்சள் துண்டு அணிகிறார்.குரு பார்க்க கோடி நன்மை என்பர்
குருபகவான் ஒருவர் ஜாதகத்தில் நல்லநிலையில் இருந்தால் அவர் நல்ல நிலையை அடையலாம்.இந்த விஷயம் தெரிந்துதான்  தகுந்த ஜோதிட ஆலோசகர்களின்  ஆலோசனையின் பேரில் மஞ்சள் துண்டு அணிகிறார் .மஞ்சள் நிறம் குருபகவானுக்கு உகந்தது
அதனடிப்படையில் இந்த நிறத்தை சேர்த்துக்கொண்டால் நல்ல நிலையை அடையலாம் .

தமிழ்நாட்டில் சேர சோழ பாண்டிய மன்னர்கள் பல கோவில்களை கட்டினர் அவற்றில் தஞ்சை பகுதிகளை ஆண்ட சோழமன்னர்களும் சரபோஜி மன்னர்களும் பலவிதமான சிவாலயங்களை கட்டினர்.ஓவ்வொரு கோவிலுக்கும் ஒரு வரலாறு உண்டு தஞ்சை மாவட்டத்தை சுற்றித்தான்
அனைத்து நவக்கிரககோவில்களும் உள்ளது அவை என்ன என்ன என்று பார்ப்போம்

குருபகவான்

இவருக்கு கோவில் கும்பகோணத்தில் இருந்து  17 கிமீ தூரத்தில் ஆலங்குடி என்னும் கிராமத்தில்
அமைந்துள்ளது.இங்குள்ள சிவன்கோவிலில் தனிசன்னதி உள்ளது.குருபெயர்ச்சியன்று இக்கோவிலில் கூட்டம் அலைமோதும் குருபகவானை வியாழக்கிழமையன்று இங்கு வழிபட்டால் மிகுந்த நலம் பயக்கும் கும்பகோணம் நகரத்திற்க்கு வந்து அங்கிருந்து செல்வது
சிறந்தது

சனீஸ்வரர்

சனீஸ்வரருக்கு சன்னதி காரைக்கால் அருகே திருநள்ளாறுவில் அமைந்துள்ளது நளமகராஜாவுக்கு சனிதோஷம் நீங்கிய இடமிது.பாண்டிச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து
அருகில் உள்ளது.கும்பகோணம் அல்லது நாகப்பட்டினத்தில் இருந்து செல்வது சிறந்தது

ராகு


ராகு தோஷம் மிககொடிய தோஷம் சிலருக்கு சீக்கிரம் திருமணமாகாது திருமணமானாலும்
குழந்தை உண்டாவதில் சிக்கல்.மேலும் கால சர்ப்பதோஷம் எனசொல்லக்கூடிய தோஷமானது ஒருவரை ஆயுள் வரை நிம்மதி இழக்கவைத்து விடும் இப்படிப்பட்ட துன்பங்கள்
உடையோர் ராகு கேது தோஷ நிவர்த்தி செய்ய வேண்டும் ஒவ்வொரு ராகு காலத்திலும் குறிப்பாக வெள்ளி ஞாயிறு அன்று ராகு காலத்தில் நடக்கும் சிறப்புபூஜையில் கலந்து கொண்டால் ராகுதோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.ராகுவுக்கு கும்பகோணத்தில் இருந்து ஆறு
கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருநாகேஸ்வரம் சிறப்பான தலமாகும்.



கேது

கேதுவுக்கு உரிய பரிகாரம் மேற்கொள்வோர் நாகை மாவட்டம் பூம்புகார் அருகேயுள்ள கீழ்பெரும்பள்ளம் என்ற இடத்தில் உள்ள கேது ஸ்தலத்தில் வழிபாடு செய்வது கேதுவினால்
ஏற்படும் கடும் துன்பங்களை குறைக்கும்

புதன்

பூம்புகார் அருகிலேயே திருவெண்காடு அமைந்துள்ளது இங்குதான் புதன் ஸ்தலம் உள்ளது
குழந்தையில்லாதவர்கள்.சரியாக படிக்காத குழந்தைகள் இங்கு வேண்டிக்கொள்வது சிறப்பு

சூரியன்

சூரியனால் உடல் உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள் பலவித நோய்களுக்கு ஆளாக வேண்டிய‌
சூழ்நிலை வரும் ஒருவர் ஜாதகத்தில் சூரியன் மிக வீக்காக இருந்தால் இங்கு சென்று வ்ழிபடலாம்.கும்பகோணம் அருகே ஆடுதுறை என்ற இடத்தில் சூரியனார் கோவில் உள்ளது

சுக்கிரன்

ஒருவர் ஜாதகத்தில் வறுமை நிலை தாண்டவமாடுபவர்கள் செல்வசெழிப்பை பெறுவதற்காக‌
சுக்கிரவ்ழிபாடு செய்யப்படுகிறது சூரியனார் கோவிலில் இருந்து 6கிமீ தூரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது


செவ்வாய்

ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் வீக்காக இருந்தால் இரண்டு மனைவிகள் அமைவதற்க்கு கூட‌
வாய்ப்புண்டு அப்படிப்பட்டவர்கள் கும்பகோணத்தில் இருந்து சிதம்பரம் செல்லும் வழியில்
உள்ள வைத்தீஸ்வரன் கோவிலில் செவ்வாய்க்கு உள்ள தனி சன்னதியில் வழிபாடு செய்யவேண்டும்


குறிப்பு:அனைவரும் கும்பகோணம் சென்று அங்கிருந்து இந்த கோவில்களுக்கு செல்வதே
சிறந்தது.குருபகவானுக்கு இங்குள்ள சுவாமிமலையிலும் ராகு பகவானுக்கு இங்குள்ள பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோவிலில் வழிபட்டாலும் இவர்களை வணங்கிய பலன் கிடைக்கும் கும்பகோணத்திற்க்கு மிக அருகில் உள்ளதால் இங்கும் சென்று வரலாம்.

Wednesday, March 7, 2012

பறந்து சென்றே சதுரகிரியிலும் கதிர்காமத்திலும் சுவாமி தரிசனம் செய்த சித்தர் முனியாண்டி சுவாமிகள்

மதுரைதிருமங்கலம் அருகே கே.ரங்கபாளையம் என்ற ஊரை சேர்ந்தவர் சித்துவிளையாட்டுக்களில் கை தேர்ந்தவர் இவர் .இவர் சதுரகிரிமலைக்கு அடிக்கடி சென்று வருவார்.அங்குள்ள சுந்தரமகாலிங்கம் சன்னதியில் தனியாக சுவாமியுடன் பேசுவதில் வல்லமை பெற்ற சக்தி வாய்ந்த மகான் இவர்.இவர் சதுரகிரிக்கு மட்டுமல்லாமல் இலங்கையில் உள்ள கதிர்காமத்திற்க்கும் வடநாட்டில் உள்ள மதுராவிற்க்கும் ஆகாய பயணம் மேற்கொள்பவர்
இவரின் பக்தர் ஓய்வுபெற்ற டெப்டிகலெக்டர் விஸ்வநாதன் என்பவர் இவருடன் இருந்த‌அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

ஒருமுறை நானும் சுவாமிகளும் திருமங்கலம் அருகேயுள்ள ரங்கபாளையம் கிராமத்தில் அமர்ந்து இருந்தோம்.அப்போது மணி 9மணி இருக்கும் சதுரகிரியில் சுந்தரமகாலிங்கத்தை தரிசிக்கவேண்டும் என்று தோன்றுகிறது.ஆனால் இந்நேரத்தில் அங்கு செல்வது மிகச்சிரமமான விஷயம் இங்கிருந்து கிருஷ்ணன் கோவில் சென்று அங்கிருந்து வத்திராயிருப்பு சென்று அங்கிருந்து தாணிப்பாறை அடிவாரத்திற்க்கு சென்று அங்கிருந்து மலை ஏறுவதற்க்கு எப்படியும்
ஏழெட்டு மணிநேரம் ஆகிவிடும் பஸ்வசதியில்லாத காலம் வேறு .சுவாமிகள் சற்று நேரம் என்னை பார்த்தார் என் கையை பிடித்துகொள்ளுங்கள் சதுரகிரிக்கு 5 நிமிடத்தில் கொண்டுபோய் சேர்க்கிறேன் என்றார்.நானும் அரைநம்பிக்கையோடு அவர் கையைபிடித்தேன் ஏதோ மயக்கநிலையில் இருப்பதைபோல் உணர்ந்தேன்.அடுத்த 5 நிமிடத்தில் சுந்தரமகாலிங்கம் சன்னதியில் உட்கார்ந்து இருந்தேன் என்னால் அந்த சிலிர்ப்பான அனுபவத்தை இன்று வரை மறக்க முடியவில்லை என்று கூறுகிறார் இந்த விஸ்வநாதன்

எனது வாழ்க்கையில் அவர் பல அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார். ”ஒருமுறை நாங்கள் குடும்பத்தோடு சென்ற கார் பள்ளத்தில் உருண்டு விழ… எங்களுக்கு ஒரு சிறு அடி,காயம்

இல்லாமல் காப்பாற்றியது சித்தர் முனியாண்டிதான் “ என்று பெருமிதாய் கூறுகிறார் டெப்டி

கலெக்டர் கொ.வெ. விஸ்வநாதன்.

சித்தர் முனியாண்டி மிகவும் சக்தி வாய்ந்தவர்.அவர் உடல் பாகங்கள் பிரிந்து சேருவதைப்

போலவே அவர் உடல் அமைப்பு மினுமினுப்பான நிலையில் இருக்கும். ஒரு சொட்டு தண்ணீர்

கூட அவர் உடல் மீது நிற்காது.அவர் கிணற்று நீரில் குதித்து மேலே வந்தால் அவர் உடலில்

ஒரு சிறு துளி நீரைக்கூட பார்க்க முடியாது. தலைமுடி உலர்ந்தது போலவே இருக்கும்.

சித்தர் முனியாண்டிக்கு மூலிகைகளைப் பற்றி இரகசியமும் தெரியும். காசநோய், புற்றுநோர்,

தீராத வயிற்று வலி என பல நோயாளிகளுக்கு கண்ணில் படும் மூலிகை இலைகளை கொடுத்து குணமாக்கியிருக்கிறார். மஞ்சள் காமாலை முற்றி டாக்டர்களால் கைவிடப்பட்ட சிறுமையை ஒரு எலுமிச்சம் பழத்தால் குணப்படுத்தி இருக்கிறார். இது போல் தன்னை நாடிவரும் அன்பர்களை எப்போதும் கைவிடாமல் காப்பாற்றுவார்.

சித்தர் முனியாண்டிக்கு பறக்கும் சக்தி இருப்பது போல காற்றாய் மறையும் சக்தியும் இருந்தது.

ஒருமுறை சித்தர் முனியாண்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் வெளிப்பிரகாரத்தில்

நின்று மீனாட்சி அம்மனை தொழுதுகொண்டிருந்த போது ,ஒரு பித்தனை போன்ற நிலையிலிருந்த சித்தரை பார்த்த காவலர்கள் அவரை சந்தேகத்தின் பேரில் அவரை கைது செய்ய அவர் திமிறினாராம். உடனே அவர் கையில் விலங்கிட்டார்கள்.



சித்தர் முனியாண்டி அவர்களை பார்த்து சிரித்துக்கொண்டே “இந்த உலகத்தில் எனக்கு பூட்டா….,

முடியாது …? என சொல்லிக்கொண்டே சட்டென மறைந்து போனார்.அவரின் சக்தியை உணர்ந்து திடுக்கிட்ட காவலர்கள் தங்களை மன்னிக்கும்படி வேண்டுதல் செய்ய அவர் முன் கைவிலங்கு

வந்து விழுந்ததாம்.

அதேபோல் திண்டுக்கல்லில் ஒரு ஓட்டலின் முன்பாக சித்தர் முனியாண்டி நிற்க, உள்ளிருந்த சிப்பந்திகள் “அந்த பரதேசியை கடைக்குள் விடாதீர்கள்.., அப்படியே விரட்டுவிடுங்கள்.. “ என்று சொல்லிக்கொண்டே அவரை நெருங்கினர்.ஆனால் என்ன அதிசயம்! அவர்கள் சித்தர் முனியாண்டி
நெருங்கிய நொடியில் அவர்களின் கண்களில் பளீர் என் மின்னல் வெட்டியது போல் வெளிச்சம் தோன்றி மறைந்தது.அடுத்த நொடி அவர்கள் கண் திறந்த போது எதிரே பரதேசி கோலத்திலிருந்த சித்தர் முனியாண்டி இப்போது பெரிய செல்வந்தர் போன்று கோட், சூட் சகிதமாக நின்று கொண்டிருந்தார். இதைக்கண்டு அதிர்ந்த சிப்பந்திகளும் சுற்றி இருந்தவர்களும் சித்தர்

முனியாண்டி ஆச்சரியமாக பார்க்க அவர் “ என்ன பண்றது பரதேசி கோலத்திலிருந்ததால் கடைக்குள்ளே விடாம துரத்தப்பார்த்தார்கள், அதான் இப்படி மாறிவிட்டேன். இனிமேல்

உடையை மட்டும் பார்க்காதீர்கள், மனிதனை பாருங்க,. மனசைப் பாருங்க..” என்று

சொல்லிவிட்டு ஓட்டலுக்கு செல்லாமலே நகர்ந்துவிட்டார்.சித்தர் முனியாண்டி இவரைப் போன்றஏ பலருக்கும் பலவித அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார்.
1989 –ம் ஆண்டு சமாதி நிலை அடைந்த சித்தரின் சமாதி கே. ரெங்கபாளைத்தில் அவரது

நிலத்தில் அமைந்துள்ளது. அவரது சமாதிக்கு சென்று மனதார தொழுதால் நினைத்தது

நடக்கும் என்கிறார்கள் அவரின் பக்தர்கள்.

Friday, March 2, 2012

இறைச்சி சாப்பிடுபவரை திருத்திய சாண்டோ சின்னப்பா தேவரின் ஆன்மா



தினமும் கோவில்களில் ஆடு வெட்டுதல்.கோழி வெட்டுதல் என்று தற்போதைய காலங்களில் மிகவும் அதிகமாகிவிட்டது.தனக்கு ஒரு பிரச்சினை என்றால் கருப்பசாமிக்கோ ,மாடசாமிக்கோ
கிடா வெட்டுகிறேன் என்று வேண்டிகொள்கின்றனர்.உண்மையில் எந்தச்சாமியும் எனக்கு ஆடு வெட்டு என்றும் கோழிவெட்டு என்றோ யாரையும் கேட்பதில்லை.இவர்களாக வலிய சென்று இது போலசெயல்களில் ஈடுபட்டு மேலும் மேலும் பாவத்தை தேடி பிரச்சினையை பெரிதாக்கி கொள்கின்றனர்,மகாத்மா காந்தி,வள்ளலார்,அன்னை தெரசா போன்ற அஹிம்சாவாதிகள் வாழ்ந்த நாடு ஒரு ஜீவனை வதைத்தால் அடுத்த பிறவியில் மிக மோசமான தெருநாயாகவோ பன்றியாகவோ பிறந்து குடிக்க தண்ணீர் கூட கிடைக்காமல் கஷ்டப்படுவோம் என்பது பலருக்கும் தெரிவதில்லை மனித உயிர்போல அனைத்து உயிர்களும் உயிர்களே உயிரினங்களை வதைத்தால் கொடிய நரகத்தில் தள்ளப்படுவோம் என கருடபுராணம் எச்சரிக்கிறது.இந்துக்களின்
புனிதமான மஹாலட்சுமியின் அம்சமான பசுமாட்டை சிலர் கொல்கின்றனர்.  அழகிய பொன்னாக்குடி என்ற ஊரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றை பிரதோஷ நேரத்தில் அம்மா என்றழைத்த நந்தி என்ற தலைப்பில் இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு கட்டுரை வெளியிட்டு உள்ளேன் முடிந்தால் அனைவரும் பாருங்கள்.இனி விஷயத்திற்க்கு வருகிறேன்


சாண்டோ சின்னப்பா தேவர் மிகச்சிறந்த சினிமா தயாரிப்பாளர் யானை குதிரை பாம்பு என விலங்குகளை வைத்து தேவர் பிலிம்ஸ் என்ற பெயரில் படமெடுத்த சிறந்த படைப்பாளி.எல்லாவற்றுக்கும் மேல் இவர் நல்ல மனிதர் முருகபக்தர். மருதமலை முருகன் மீது அளவு கடந்த பிரியமுள்ளவர்.புலால் உண்பதை வெறுத்தவர்.இவரின் தெய்வம்,திருவருள்,வெள்ளிக்கிழமை விரதம் போன்ற படங்கள் முருகனின் சிறப்புக்களையும்
இறை நம்பிக்கையை வளர்ப்பதாகவும் வந்தன.இவர் மறைந்த பிறகு ஆவிகள் உலக பயிற்சி பெற்ற மீடியங்கள் இவர் ஆன்மாவை அழைத்து பேசுவர்.ஒருமுறை தனது சகோதரிக்கு திருமணம் நடப்பது விசயமாக ஆவிகள் பயிற்சி பெற்றவரிடம் வந்திருந்தார் ஒரு அன்பர். சின்னப்பாதேவரின் ஆன்மாவை கூப்பிட அவரும் வந்தார் தங்கை திருமணம் தடைபடுவதற்க்கு உரிய சில காரணங்களை சொல்லி சில கோவில்களின் பெயரையும் அங்கு சென்று வரசொன்னார்
அதோடு நீ இறைச்சிசாப்பிடுபவன். என்று புலால் உண்பதை நிறுத்துகிறாயோ அன்றே உனக்கு உன் பிரச்னைகள் தீரும்.அது வரை உன் பிரச்னைகள் உன்னை வாட்டிகொண்டே இருக்கும் என்றார்.அன்றே அந்த நண்பர் புலால் உண்பதை நிறுத்திவிட்டார்.ஒரு காலத்தில் இறைநம்பிக்கையே இல்லாத மனிதர் அவர். சாண்டோ சின்னப்பா தேவரின் சொல் கேட்டு
இன்றுவரை இறைச்சியை கையால் தொடுவதில்லை.தேவருக்கு நன்றி செலுத்தும் வகையில் நடந்தே மருதமலை முருகன் கோவிலுக்கும் செல்கிறார்.அவரின் சகோதரியும் இப்போது
கல்யாணமாகி நல்ல நிலையில் உள்ளார்.இது போல இன்றும் தன்னை அழைத்து மீடியத்திடம்
தன் பிரச்னைகளுக்கு விபரம் கேட்பவர்களை புலால் உண்ணாமையின் மகத்துவம் குறித்து
எடுத்துசொல்லி வருகிறார் சின்னப்பா தேவர் அவர்கள். வாழும்போது மட்டும் அல்லாமல் வாழ்ந்து முடிந்த பின்னரும் நற்சேவை செய்யும் சின்னப்பா தேவர் போற்றுதலுக்குரியவர்.

கடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்துமாரியம்மன் ஆலயம்

தஞ்சை மாவட்டம் , மயிலாடு ‌ துறை வட்டம் , குத்தாலம் அருகில்   உள்ள ‌ சேண்டிருப்பு கிரமத்தில் எமுந்தருளி பேரருள் வ ‌ ழங்கும்   அருள...