Saturday, December 10, 2011

சனி தோஷம் சங்கடம் தீர்க்கும் ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவில்



எங்கள் ஊரான ராமநாதபுரம் நகரில் இக்கோவில் அமைந்திருக்கிறது. ராமநாதபுரம் பேருந்து நிலையத்திலிருந்து இந்தக்கோவில் மிக அருகில் உள்ளது சனிதோஷம் சனியால் அவதிக்குள்ளாவோர் இக்கோவிலின் ஸ்தலவிருட்சமாக உள்ள இந்தசாயா மரம் வேறு எங்கும் கிடையாது.இந்த மரம் சனீஸ்வரபகவானின் தாய் சாயாதேவி என்பவளாவாள். சனீஸ்வரனின் தாய் சாயாதேவியே இந்தமரமாக சொல்லப்படுகிறது

பொதுவாக கருணைவடிவானவர்களாக பெண்களை சொல்வதுண்டு .சாயாதேவியிடம் தன் கஷ்டங்களை சொல்லிவேண்டும்போது அவள் இரக்கப்பட்டு தன் மகனான சனீஸ்வரனிடம் சொல்வதுண்டு.சனீஸ்வரனும் தாய்மீது உள்ள மரியாதையால் பக்தர்கள் கிரக பலன்களை
குறைப்பார் என்றும் நம்பப்படுகிறது

எந்த கோவிலிலும் காணாத வகையில் விநாயகரும் முருகனும் சேர்ந்தே இந்தக்கோவிலில் இருப்பது சிறப்பு .முன்பு இந்த இடத்தில் சாயாமரத்தடியில் சிறியகோயிலாக முருகனும் விநாயகரும் இருந்து அருள்புரிந்தார்கள் இந்த இடத்திற்கருகே நீதிமன்றம் அமைந்திருந்தது
கோர்ட்டிற்க்கு செல்பவர்கள் இங்குள்ள முருகனை வழிபட்டு செல்வார்கள் கோர்ட்டில்  அவர்
பக்கம் நியாயமான தீர்ப்பு கிடைக்கும்.அதனால் மகிழ்ந்த ஒருவர் சிறியகோவிலாக எழுப்பினார்
பலரது முயற்சியால் இன்று பெரியகோவிலாக வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இங்குள்ள முருகனை வழிபடுவர்களுக்கு துணையாக நல்ல காரியங்களுக்கு வழிஅமைத்து கொடுப்பதால்
வழிவிடும் முருகன் கோவில் எனப்பெயர் வந்தது.

No comments:

Post a Comment

கடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்துமாரியம்மன் ஆலயம்

தஞ்சை மாவட்டம் , மயிலாடு ‌ துறை வட்டம் , குத்தாலம் அருகில்   உள்ள ‌ சேண்டிருப்பு கிரமத்தில் எமுந்தருளி பேரருள் வ ‌ ழங்கும்   அருள...