Wednesday, December 7, 2011

மேலுலகத்தில் சரஸ்வதிபூஜை கொண்டாடப்படும் விந்தை

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படவே இந்த தளம் தொடர்ந்து நடத்தப்படுகிறது.கடவுள் நம்பிக்கை அரைகுறையாக உள்ளவர்கள் முருகன்,விநாயகர்
அம்மன் போன்றோர் உள்ளனரா என நினைப்போரும் ஆவியுலகம் சம்பந்தப்பட்ட புத்தகங்களை
படிப்பதால் ஓரளவிற்க்கு கடவுள் பற்றிய தெளிவு பெறலாம்.சிஎம் .ரத்தினசாமி அவர்கள் எழுதிய‌
ஆவிகளுடன் நாங்கள்,நர்மதா பதிப்பகம் வெளியிட்டு ஆவியுலகத்தொடர்பும் ஆறுமுகக்கடவுளும்,முருகபெருமான் உரைக்கும் பூர்வஜென்மங்கள் இந்த புத்தகமெல்லாம்
வக்கீல் ஞானவேல் என்பவர் முருகக்கடவுளிடம் ஆட்டோ ரைட்டிங் முறையில் பேசி முருககடவுளுடனான அனுபவங்களை புத்தகமாகவெளியிட்டார் படித்தால் ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றுவிடுவீர்கள்.இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தார்போல் ஒரு புத்தகம் எனக்கு சமீபத்தில் கிடைத்தது இந்த புத்தகத்தை சிறுவயதில் நான் எங்கள் வீட்டில் பார்த்திருக்கிறேன் அப்போது இதைபற்றி எதுவும் தெரியாமல் விட்டுவிட்டேன்.சமீபத்தில்
ஆவியுலக ஆராய்ச்சியாளர் விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் பேட்டியை படிக்க நேர்ந்தது அதில்
அவருக்கு இந்ததுறையில் இன்ஸ்பிரேசனாக அமைந்த சில விஷயங்களை சொல்லியபோது
மதுரை முன்னாள் ஆதினம் 291வது குருமகா சன்னிதானம் ஞானசம்பந்த தேசிகபரமாச்சர்யார்
அவர்கள் எழுதிய இறந்தவர்கள் வாழும் நிலையும் பேசும் முறையும் என்ற புத்தகத்தை பற்றி
சொன்னார்அவர் சொன்னவுடன் அந்தபுத்தகத்தை நான் சிறுவயதில் எங்கள் வீட்டில் இருந்த ஞாபகம் வந்தது
ஆவியுலகம் சம்பந்தமாக தமிழில் வந்த முதல் புத்தகமாக இது இருக்கும் என்று நினைக்கிறேன்
அந்தபுத்தகத்தை மிக நீண்ட தேடுதலுக்கு பிறகு அந்தபுத்தகம் எனக்கு கிடைத்தது எங்கும் கிடைக்காத புத்தகம் அது.1976ல் ஆறாவதுபதிப்பாக அந்த புத்தகம் வெளிவந்துள்ளது அந்த புத்தகத்தில் உள்ள விஷயங்கள் என்னை ஆச்சரியத்தின் உச்சிக்கே கொண்டுசென்றன‌
அதில் மேலுலகத்தில் இறந்தவர்கள் சிவபூஜை செய்வதும் முதலில் ஆவிலோகமும் அதன்பிறகு
பிரம்மலோகமும்,அதன்பிறகு விஷ்ணுலோகமும்.அதன்பின்பு சிவலோகமும் உள்ள விஷயத்தை ஒரு சிறுமியின் ஆன்மா கூறும் விஷயத்தை கேட்டு ஆச்சரியமடைந்தேன் மேலும்
மேலோகத்தில் ஆயுதபூஜை கொண்டாடும் முறைபற்றியும் கூறியுள்ளார் உங்களுக்காக அந்த பகுதியை மட்டும் தருகிறேன்.பிக்சராகdouble click seydhu சேவ் செய்து ஜூம் செய்து படியுங்கள்

1 comment:

கடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்துமாரியம்மன் ஆலயம்

தஞ்சை மாவட்டம் , மயிலாடு ‌ துறை வட்டம் , குத்தாலம் அருகில்   உள்ள ‌ சேண்டிருப்பு கிரமத்தில் எமுந்தருளி பேரருள் வ ‌ ழங்கும்   அருள...