Tuesday, February 14, 2012

சிவராத்திரிஅன்னதானம் சிறப்புக்கட்டுரை

தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பர் சிவராத்திரியை முன்னிட்டு சிவபெருமானின் அக்னித்தலமான நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் அன்னதானம் செய்வது மிகுந்த சிறப்பைத்தரும். மற்ற ஊர்களில் இல்லாத அளவிற்க்கு திருவண்ணாமலையில் அன்னதானம் செய்வர் அதற்க்கு ஒரு சிறப்புக்காரணம் இருக்கிறது

சீனந்தல் சிவப்பெருவாளச்சித்தர் என்பவர் பல நூறு ஆண்டுகளுக்கு முன் திருவண்ணாமலையில் தோன்றியவர்.அஷ்டமாசித்திகள் கைவரப்பெற்றவர் ஸ்தம்பனம்,மோகனம்,வசியம்,உச்சாடனம்,மாரகம்,உத்வேஷணம்,கல்பம்,மகா உத்தி போன்ற எட்டுவித உத்திகளின்படி பல அரியமருந்துகளை தயாரித்து மக்களின் தீராத நோய்களை போக்கியவர்.அந்த வகையில் இவர் கிரிவலம் வரும்போது தூல,சூக்கும,பாவன்,அரூப வடிவுகளில் அண்ணாமலையை கிரிவலம் வருகிறார் கிரிவலத்தின்போது பக்தர்கள் காலில் விழுந்து நசுங்கிய எறும்புகளுக்கும் சிகிச்சை செய்தவர் இவர்.ஒருமுறை சிவபெருமான் கிரிவலத்தின்போது மானிடவடிவில் வந்து தனக்கு அடங்கா கோரபசி ஏற்படுவதாகவும் இந்த வியாதியை தாங்கள் போக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.சித்தர் மானிட வடிவில் வந்திருக்கும்
சிவனின் கைநாடியை பிடித்து பார்த்தார் கோடியில் ஒருவருக்கே வரும் வாள[நாடி]துடிப்பு அது.இந்த வாளத்துடிப்பால் அடங்காத பசி ஏற்படும். இதை தீர்க்கவேண்டுமென்றால் அண்ணாமலையில் பல கோடி பேர்களுக்கு அன்னதானம் பண்ணியவரின் கரங்களால் உணவு சமைத்து எடுத்து வந்தால் அதில் நான் தரும் பெருவாளபஸ்பத்தினை கலந்து மருந்தாக சாப்பிட்டல் இந்த நோய் தீரும் என்கிறார்.உடனே சிவபெருமான் கோடிபேருக்கு அன்னதானம் இட்டவர் பற்றிய விவரம்பைரவரிடம் கேட்கவே அக்னி பகவான் ஒருவரே மனிதவடிவில் கிரிவலம் வந்து
பல கோடிபேர்களுக்கு அன்னம் இட்டவர் என்று அவரை அங்கு அழைத்து வந்து விட்டார்.


சிவனுக்கு ஆகுதி தர மறுத்த தட்சனுடைய யாகத்தில் வேள்விக்கு ஆதாரமாய் நின்று பங்கு கொண்டமையால் தன்னுடைய அக்னிப்பிரகாசம் குறைந்ததால் அதற்க்கு பரிகாரம் தேடி கிரிவலம் செய்து கோடிக்கணக்காணவர்களுக்கு அன்னதானம் செய்துவருவதாக அக்னிபகவான்
கூற பைரவரும் மானிடராக வந்த சிவ்னை யாரென சொல்லாமல் அவருக்கு உணவாக்கிதரும்படி சொல்ல அக்னி பகவானும் ஒப்புக்கொண்டார்.அன்னபூரணி அரிசி வார்க்க‌





சாகம்பா தேவி பொருட்களை அரிந்து தர பிரம்மா வேதாக்னி தந்திட உணவு தயாராயிற்று
தயாராக இருந்த பஸ்பத்தை உணவில் சிவப்பெருவாளர் கலந்து சிவனின் பசி என்னும் கொடியநோயை தீர்த்துவைத்தார். அப்போது அருணாசலப்பெருமான் அசரீரியாய் சித்தரை நோக்கி எமை ஜோதியாய் அடைவீர் அருளி அவரை ஆட்கொண்டார். மிக அபூர்வமான கிடைத்தற்கரிய சிவனின் திருவடியில் மாதா அன்னபூரணியே சிவப்பெருவாளரை ஆசிர்வதித்த கிரிவலப்பாதையில் மஹா சிவராத்திரி அன்று அன்னதானம் செய்தால் கல்வி
வேலை,பதவி,ஆரோக்கியம்,குடும்ப நன்மை,வழக்கு,திருமணம் இவற்றில் இருந்த பிரச்சினை
நீங்கி சுபம் உண்டாகும்.மேலும் ஊழ்வினைப்பயனால் சாப்பிடமுடியாமல் அவஸ்தைக்குள்ளாகும் நோய் உள்ளோர் ஹோட்டல்,காய்கறி வியாபாரம் செய்பவர்களுக்கு
மிகச்சிறப்பாக இருக்கும் நாமும் சிவராத்திரி அன்று திருவண்ணாமலை செல்ல முடியாவிட்டாலும் உள்ளூரில் இருக்கும் சிவன்கோவிலிலாவது அன்னதானம் செய்து அந்த சிவனருள் பெறுவோம். நாளை சிவராத்திரியின் சிறப்புக்களை பார்ப்போம்

No comments:

Post a Comment

கடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்துமாரியம்மன் ஆலயம்

தஞ்சை மாவட்டம் , மயிலாடு ‌ துறை வட்டம் , குத்தாலம் அருகில்   உள்ள ‌ சேண்டிருப்பு கிரமத்தில் எமுந்தருளி பேரருள் வ ‌ ழங்கும்   அருள...