Sunday, February 19, 2012

மஹாசிவராத்திரியில் சிவனை வழிபடுவதால் விருப்பங்களே இல்லாத உயர்ந்த நிலையை அளிக்கும்.


சிவராத்திரி மகிமை பற்றி கூறும் ஒரு வில்வ மரத்தடியில் சிவராத்திரி தினத்தன்று சிவன் பார்வதி இருவரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது அந்த மரத்திலிருந்த குரங்கு ஒன்று
தானும் தூங்காமல் விழித்துகொண்டிருந்தது.தூக்கம் வராத குரங்கு வில்வ இலைகளை பறித்து

தூங்காமல் சிவன் மேலும் பார்வதி மேலும் வீசிக்கொண்டிருந்தது சிவராத்திரியில் 4காலங்களிலும் குரங்கு வீசிய வில்வ இலைகளை ஏற்று குரங்கை முசுகுந்த சக்கரவர்த்தியாய் பிறக்க அருள்புரிந்தார். குரங்கும் சிவபூஜை செய்து தான் பெற்ற பாக்கியத்தை உலகம் அறியும் பொருட்டு தான் இந்த குரங்கு முகத்துடனே இருக்கவேண்டும் என சிவனிடம் கோரியது.அவரும் அதை ஏற்றுகொள்ள அந்த குரங்கு சோழமன்னன் முசுகுந்த சக்கரவர்த்தியாய் பிறந்து ஆட்சி  புரிந்ததை நமக்கு சிலப்பதிகாரம்,மணிமேகலை,கலிங்கத்துபரணி, முதலான நூல்கள் காட்டுவதால் சிவராத்திரி மகிமையை அறியலாம் இதே போல் எமன்,மன்மதன்,இந்திரன்,அக்னி,சந்திரன் ,குபேரர், என இன்னாளில் சிவனை வழிபட்டு நன்னிலை அடைந்தோர் அதிகம். சிவராத்திரி அன்று வழிபடுவோரின் எண்ணங்களை நிறைவேற்ற பார்வதி தேவி சிவனிடம் வேண்டினார் இதுபோலவே சிவன் சிவராத்திரியன்று வழிபடுவோரின் எண்ணங்களை நிறைவேற்றி வருகிறார்.

1 comment:

கடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்துமாரியம்மன் ஆலயம்

தஞ்சை மாவட்டம் , மயிலாடு ‌ துறை வட்டம் , குத்தாலம் அருகில்   உள்ள ‌ சேண்டிருப்பு கிரமத்தில் எமுந்தருளி பேரருள் வ ‌ ழங்கும்   அருள...